முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரியில் தொடங்கி வைக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவையில் முதலமைச்சர் தொடங்கி வைத்த ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம், நகர்ப்புறங்களில் முகாம் நடத்தி மனுக்கள் பெறப்பட்டன. இதன்மூலம் சுமார் 8 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நகரப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் தொடங்கி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மேலும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுகிறார். இதையும் படிக்க: நீங்கள் நலமா? திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் பேசிய முதலமைச்சர் அதனை தொடர்ந்து, 2014 பேருக்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடு குறித்த காணொளியை தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் பகிர்ந்துள்ளார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் இதுவரை 8 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : July 11, 2024, 7:36 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரியில் தொடங்கி வைக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவையில் முதலமைச்சர் தொடங்கி வைத்த ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம், நகர்ப்புறங்களில் முகாம் நடத்தி மனுக்கள் பெறப்பட்டன. இதன்மூலம் சுமார் 8 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நகரப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் தொடங்கி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மேலும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுகிறார். விளம்பரம் இதையும் படிக்க: நீங்கள் நலமா? திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் பேசிய முதலமைச்சர் அதனை தொடர்ந்து, 2014 பேருக்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடு குறித்த காணொளியை தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் பகிர்ந்துள்ளார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: CM MK Stalin , TN Govt First Published : July 11, 2024, 7:36 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
கேரளாவை போல சென்னையிலும் உணவகத்துடன் மிதவை படகுகள்! எங்கு தெரியுமா?
- by Sarkai Info
- January 7, 2025


What’s New
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
- By Sarkai Info
- January 7, 2025
Spotlight
Today’s Hot
Featured News
Latest From This Week
யார் அந்த சார்? விடை தேடும் போலீஸ்..அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விசாரணை அப்டேட்!
TAMIL
- by Sarkai Info
- January 3, 2025
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் போது அதிமுக என்ன செய்தது? திமுக அமைச்சர் கேள்வி!
TAMIL
- by Sarkai Info
- January 3, 2025
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை! ஏன் தெரியுமா?
TAMIL
- by Sarkai Info
- January 3, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.