TAMIL

உணவில் சிறுநீரை கலந்து கொடுக்கும் பணிப்பெண்! அதிர்ச்சியளிக்கும் வீடியோ!

உத்தரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிர்ச்சி சம்பளம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த வீட்டில் பணி புரியும் பணிப்பெண்ணின் மோசமான செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த பணிப்பெண், உணவுக்காக சமைத்து கொண்டிருந்த மாவில் அவரது சிறுநீரை கலப்பது அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பணிப்பெண் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிப்பதும், அதனை சமைக்க பயன்படுத்துவதும் தெரிகிறது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஜியாபாத்தில் உள்ள கிராசிங் ரிபப்ளிக் சொசைட்டியில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் படிக்க | காட்டுக்கு ராஜான்னாலும் கட்டுப்பாடு இருக்குல்ல! யானையின் குரலுக்குக் கட்டுப்படும் ராஜா குடும்பம் வீடியோ வைரல்... குடும்பத்தினர் அனைவருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகத் தொடங்கினர், அதனால் அவர்கள் மருத்துவரிடம் சென்று சோதனை செய்து பார்த்தும், மருத்துவரால் இதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு சாப்பிடும் உணவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது, பின்னர் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள சமையலறையில் ரகசிய கேமராவை வைத்துள்ளனர். அவர்கள் வீடியோவைப் பார்த்தபோது, ​​​​அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த அக்டோபர் 14ம் தேதி வெளியான வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்பு அந்த குடும்பத்தினர் இது குறித்து காவல் நிலையில் உடனடியாக புகார் அளித்தனர். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். A shocking incident has come to light from #Ghaziabad , #UttarPradesh , where a maid has been arrested for preparing food with her urine. The house help identified as #Reena was caught red handed in the kitchen urinating in a vessel. The incident occurred on Monday and was… pic.twitter.com/5Hi1YiKIZz — Hate D@HateDetectors ) October 16, 2024 அதே வீட்டில் 8 ஆண்டுகளாக பணி புரியும் பணிப்பெண்! கடந்த 8 வருடங்களாக அந்த பணிப்பெண் அந்த குடும்பத்திற்கு சமைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபகாலமாக கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அவர்களை கவலையடையச் செய்தது. எனவே, என்ன நடக்கிறது என்று பார்க்க சமையலறையில் கேமராவை பொறுத்தியுள்ளனர். ரொட்டி செய்வதற்காக பயன்படுத்தப்படும் மாவில் தண்ணீருடன் சிறுநீரையும் கலந்து இருப்பது தெரிய வந்துள்ளது. பணிப்பெண் எவ்வளவு காலமாக இதனை செய்து கொண்டிருந்தார் என்று அந்த குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இந்நிலையில், குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் செய்ததை அடுத்து பணிப்பெண்ணை கைது செய்து என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். குடும்பத்தினர் அளித்த புகாரை ஏற்று போலீசார் விசாரிக்க முடிவு செய்தனர். பிறகு பணிப்பெண் ரீனாவை கைது செய்தனர். போலீசார் ரீனாவிடம் பேசியபோது, ​​தான் எந்த தவறும் செய்யவில்லை என முதலில் கூறியுள்ளார். ஆனால் அவரிடம் வீட்டில் இருந்த கேமராவில் பதிவான வீடியோவை காட்டியபோது தனது மோசமான செயலை ஒப்புக்கொண்டுள்ளார். சிறு சிறு தவறுகளுக்கு கூட தனது முதலாளி தன்னை திட்டியதால் இப்படி செய்ததாக தெரிவித்துள்ளார். ரீனா மீது பிஎன்எஸ் பிரிவு 272 (உயிருக்கு ஆபத்தான நோய் தொற்று பரவும் வீரியம் மிக்க செயல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க | மூச்சுவிடும் பூமி... இணையத்தில் வைரலாகும் அதிசய வீடியோ: மிஸ் பண்ணாம பாருங்க சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.