TAMIL

வக்ரத்தில் இருந்து நேராகும் சனி பகவான் அள்ளிக் கொடுப்பார்! இந்த ராசிகள் காட்டில் பண மழை!!

சனி வக்ர நிவர்த்தி 2024: நீதிபதியும் கர்மாதிபதியுமான சனி தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார். தற்போது வக்ர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் சனீஸ்வரர், நவம்பர் 15ஆம் தேதி வக்ர நிவர்த்தி பெறுகிறார். சனீஸ்வரர் தனது பாதையை மாற்றி, இயல்பான பாதையில் பயணிப்பதால் பலருக்கு நிம்மதிப் பெருமூச்சு வரலாம், அதிலும், ஏழரைச்சனி, சனி மகாதசை நடக்கும் ராசிக்காரர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கப் போகிறது. கடகம், விருச்சிகம், மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடி சஞ்சாரம் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். யாருக்கு எந்த அளவில் யோகம் ஏற்படும்? தெரிந்து கொள்வோம். கடகம் கடக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி நிம்மதியாக இருக்கும். அதிக சுமையாஅ பொறுப்புகளிலிருந்து விடுபடுவீர்கள், நிதி நிலை மேம்படும், கொஞ்சமாவது மன அமைதியை உணரலாம். வாழ்க்கைத்துணையுடனான உறவும் முன்பை விட சிறப்பாக இருக்கும், இல்லற வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். சனியின் வக்ர நிவர்த்தியால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காணலாம். விருச்சிகம் விருச்சிக ராசியினருக்கு பிரச்சனைகள் முடியும் காலம் வந்துவிட்டது. சனி பகவான் வக்ர கதியில் இருந்து மாறுவதால், நவம்பர் 15 முதல் உங்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் தொடங்கும். சனீஸ்வரரின் அருளால் முதலீடுகள் நல்ல லாபத்தைக் கொடுக்கு. சொத்து அல்லது வாகனம் வாங்கும் ஆசைகள் நிறைவேறும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், எடுத்த எல்லா வேலைகளும் எளிதாக முடிவடையும். சமூகத்தில் கௌரவமும் அதிகரிக்கும். மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: தீபாவளிக்கு பின் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் பிறக்கும் மகரம் மகர ராசிக்காரர்களுக்கு சனியின் கடைசிக் கட்ட ஏழரை அதாவது மங்கு சனி காலத்தில் நடைபெறும் வக்ர நிவர்த்தியால், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். குழந்தைகள் வழியில் சில நல்ல செய்திகளும் வந்து சேரும். நிதி நிலையும் மேம்படும். முன்பு செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும், சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். காதல் வாழ்க்கையில் நல்லிணக்கம் அதிகரிப்பதால், மனம் லேசாகும். கும்பம் தற்சமயம் கும்ப ராசியில் சனி வக்ர கதியில் இருக்கும் நிலையில், சனியின் வக்ர நிவத்தியால், கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும். நிதி, மனம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும், வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, நேரம் சாதகமாக இருக்கும். மனைவியுடனான உறவு சுமுகமாக இருக்கும், இருவரும் இணைந்தே இனி எல்லா பிரச்சனைகளையும் ஒன்றாகச் சந்திப்பீர்கள். மீனம் நம்பிக்கை மிகுதியாக இருக்கும் காலம் இது. எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் குறையும், மனதில் உல்லாசம் பொங்கும், திருமணம் போன்ற சுபகாரியங்கள் வீட்டில் நடந்தேறும். சனியின் வக்ர நிவர்த்தியால், மீன ராசிக்காரர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். ஓடி ஓடி உழைக்கும் ஆர்வமும் அதிகரிக்கும். (பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - News இதற்கு பொறுப்பேற்காது.) மேலும் படிக்க | பெளர்ணமியில் தொடங்கிய ஐப்பசி மாதம்! 12 ராசிகளில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை? மாத ராசிபலன்... சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.