TAMIL

நடுரோட்டில் பீர் குடித்த குரங்கு செய்த வேலை... ஷாக்கில் நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ

Viral Video: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. குரங்கு வீடியோகளுக்கென இணையத்தில் தனி கிரேஸ் உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது பகிரப்பட்டுள்ள வீடியோ மிக வித்தியாசமானது. குரங்குகள் பொதுவாக சாலையில் செல்பவர்களின் பொருட்களை இழுப்பதையும், அவர்களது ஆடைகளை பிடித்து இழுப்பதையும் பார்த்துள்ளோம். ஆனால், சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் குரங்கு மதுபானம் அருந்துவதை காண முடிகின்றது. இதை பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், இது நமக்கு அதிர்ச்சியை அளிக்கின்றது. பிரேசிலின் பரனாவில் இரண்டு குரங்குகள் சாலையோரம் உள்ள ஒரு குப்பைத் தொட்டியின் மீது அமர்ந்து குப்பைத் தொட்டியில் போடப்பட்டிருந்த பீர் பாட்டிலை எடுத்து அதில் மீதமுள்ள பீரை குடிப்பதை வைரலாகி வரும் இந்த வீடியோவில் காண முடிகின்றது. இரண்டு குரங்குகள் குப்பை தொட்டியில் அமர்ந்து பீர் குடிக்கும் இந்த வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் படிக்க | Chennai Rains : தண்ணீரில் அறுந்து விழுந்த மின்கம்பி! பட்டாசு போல தீப்பொறி பறக்கும் வீடியோ.. வைரலான வீடியோ பற்றி கருத்து தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள், மக்கள் பீர் பாட்டில்களை இப்படி குப்பையில் வீசுவதால் விலங்குகளின் உடல் நலமும் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர். குரங்குகள் மனிதர்களை ஒத்த உயிரினங்களாக இருக்கலாம். ஆனால் மனிதர்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களை உட்கொள்வது அவற்றின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதனால் இவற்றின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படும் என நகராட்சி சுற்றுச்சூழல் துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. பீர் அடித்து பந்தா செய்த குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்: m macaco bêbado provou que somos mais parecidos do que pensávamos após beber uma cerveja que havia encontrado no lixo enquanto espectadores atônitos assistiam. O vídeo, filmado no Paraná, mostra dois macacos-prego sentados em uma lata de lixo enquanto um deles bebe uma cerveja… pic.twitter.com/TRY3TSYLiW — Gazeta Brasil (@SigaGazetaBR) October 10, 2024 இந்த வீடியோ சமூக ஊடக தளமான X-இல் Gazeta Brasil என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல விதமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘குரங்குகள் மது அருந்தும் காட்சிகள் அரிது. குரங்குகள் மது அருந்துவது அவற்றுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘குரங்குகள் ஏற்கனவே மிகவும் துடிப்பானவை. பீர் போன்றவற்றை இவற்றின் கை படும்படி வைத்தால், போதையில் இருக்கும் குரங்குகளால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது’ என மற்றொரு பயனர் கூறியுள்ளார். மேலும் படிக்க | நடு ரோட்டில் வீடு கட்ட பாடுபடும் பாம்பு: மிகவும் அரிதான வைரல் வீடியோ சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.