TAMIL

பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பெரிய கோலிவுட் ஸ்டார்! யார் தெரியுமா?

இந்திய திரையுலகை மட்டுமன்றி, உலகையே திரும்பி பார்க்க வைத்த படங்களுள் ஒன்று, பாகுபலி. இந்த படத்தில், பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர்களுள் ஒருவரான ராஜமெளலி இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிக்க ஒரு தமிழ் நடிகரை கேட்டுக்கொண்ட போதும் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம். அந்த நடிகர் யார் தெரியுமா? பாகுபலி திரைப்படம்: தெலுங்கு திரையுலகின் தனித்துவமான இயக்குநராக விளங்குபவர், ராஜமெளலி. நான் ஈ படத்தை இயக்கி, 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கிய படம்தான், பாகுபலி. இந்த படத்தில் ரசிகர்களால் ரிபல் ஸ்டார் என அழைக்கப்படும் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க, அவருடன் முக்கிய கதாப்பாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்தனர். வில்லன்களாக, நாசரும் ராணா டகுபதியின் நடித்திருந்தனர். பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த ‘அந்த’ நடிகர்! பாகுபலி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் அழைப்பு சென்ற நடிகர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை, நம்ம ஸ்டார் நடிகர் சூர்யாதான். இவரை, பாகுபலி படத்தில் நடிக்க வைக்க எவ்வளவோ போராடியிருக்கிறார் ராஜமெளலி. ஆனால், ஒரு சில காரணங்களால் அதில் நடிக்க மறுத்திருக்கிறார் சூர்யா. இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருக்கும் அவர், ராஜமெளலி கொடுத்த அந்த வாய்ப்பை தான் தவற விட்டுவிட்டதை எண்ணி, இப்போதும் வருந்துவதாகவும் கூறியிருக்கிறார். இதனால் அடுத்த முறை இது போன்ற வாய்ப்பு வந்தால் அதை மிஸ் செய்யப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். நடிகர் சூர்யாவிற்கு தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். இதனால், ராஜமெளல் சூர்யாவை பாகுபலி படத்தில் நடிக்க அழைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. சூர்யா மறுத்த அந்த படம், சுமார் 180 கோடி செலவில் உருவாகி உலகளவில் 650 கோடி வரை வசூலித்தது. அதே போல இரண்டாம் பாகமும் சுமார் 250 கோடியில் உருவாகி, மொத்தமாக உலகளவில் 1,500 கோடி ரூபாய் வரை கலெக்ட் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் படிக்க | பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிக்க கும்கி யானைகள் வரவழைப்பு! சூர்யா இப்போது என்ன செய்கிறார்? நடிகர் சூர்யா கடைசியாக ஹீரோவாக நடித்த படம், எதற்கும் துணிந்தவன் திரைப்படம்தான். இது தவிர, ஒரு சில படங்களில் அவர் கேமியோ கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது இந்தியில் வெளியான சர்ஃபிரா படத்தில் கெளரவ தோற்றத்தில் தாேன்றினார். இதையடுத்து தற்போது கங்குவா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்தை அடுத்து அவர் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சூர்யா , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து மும்பைக்கு குடி பெயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. கூட்டுக்குடும்பத்தில் இருந்த அவர், தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துக்கொள்வதாகவும் சாெல்லப்படுகிறது. சென்னைக்கு தன் பட ப்ரமோஷனுக்காக அடிக்கடி வரும் ஜோதிகா, தனது மாமனார்-மாமியார் வீட்டிற்கு வராமல் இருப்பதும் திரை வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. சமீபத்தில் அகரம் தொண்டு நிறுவனம் சார்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தனது தந்தை மற்றும் சகாேதரர் உடன் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். அப்பாேது அவருடன் ஜோதிகா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | அனிமேஷன் வடிவில் ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’..மே 17 வெளியீடு சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.