தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடர் முடிந்த பிறகு இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது இந்திய அணி. அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் 2025 தொடர் நடைபெற உள்ளது. அதன் பிறகு ஜூன் மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கடந்த சில தொடர்களில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் படிக்க | IND vs AUS: ரோஹித் சர்மா நீக்கம்! கேப்டனாகும் பும்ரா! 5வது டெஸ்ட்டிற்கான இந்திய அணி அறிவிப்பு! இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடர் தான் இவர்கள் இருவருக்கும் கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு அதிகம் வாய்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் முடிந்த பின்பு ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஐந்தாவது நாளில் படுதோல்வி அடைந்தது. இதனால் இந்த தொடரில் 1-2 என்று பின்தங்கி உள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடிய போதிலும், பும்ரா அதிக விக்கெட்களை எடுத்த போதிலும் மூத்த வீரர்கள் சிறப்பாக செயல்படாததால் இந்திய அணி தோல்வியை தழுவி வருகிறது. எனவே டெஸ்ட் அணியில் பிசிசிஐ சில அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. டெஸ்டில் இனி யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கேஎல் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பிசிசிஐ விரும்புகிறது. மிடில் ஆர்டரில் ஷுப்மான் கில், ரிஷப் பந்த், நிதிஷ் குமார் ரெட்டி, சர்பராஸ் கான் ஆகியோர் இடம் பெற உள்ளனர். மேலும் துருவ் ஜூரல்க்கு வாய்ப்பு வழங்க பிசிசிஐ விரும்புகிறது. அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் பேக்அப் வீரர்களாக இடம் பெறுவார்கள். ரவீந்திர ஜடேஜா, வாசிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஸ்பின்னர்களாக இடம் பெறலாம். வேகப்பந்து வீச்சில் பும்ரா, முகமது, முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் இடம் பெறலாம். ரோஹித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்தால், பும்ரா அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம். பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியாவை வழிநடத்தி, வெற்றி பெற்று தனது தலைமைத்துவ திறமையை வெளிப்படுத்தியுள்ளார் பும்ரா. 2025ல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான கணிக்கப்பட்ட இந்திய அணி: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (WK), துருவ் ஜூரல் (WK), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா (Captain), முகமது ஷமி, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, தேவ்தத் படிக்கல், குல்தீப் யாதவ். மேலும் படிக்க | ரோஹித் ஷர்மா முதல் அஸ்வின் வரை! இந்த ஆண்டு ஓய்வை அறிவித்த வீரர்கள்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்? வைரலான வீடியோவால பரபரப்பு!
- By Sarkai Info
- January 6, 2025
Featured News
வாழ்வில் வெற்றி பெற..ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து கற்க வேண்டிய பாடங்கள்!
- By Sarkai Info
- January 6, 2025
Latest From This Week
சென்னையில் HMPV வைரஸ்... 2 குழந்தைகளுக்கு பாதிப்பு... மக்களே ஜாக்கிரதை!
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் அறிமுகம்... விலை.... சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட விபரங்கள்
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
வலது கையில் ஏன் நகம் வளர்க்க கூடாது? ‘இந்த’ 7 பிரச்சனைகள் வரும்..
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.