TAMIL

ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக டெஸ்ட் விளையாடிய 3 இந்திய பிளேயர்கள்..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால், பார்டர் - கவாஸ்கர் டிராபியை 3-1 என ஆஸ்திரேலியாவிடம் இந்தியா பறிகொடுத்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் ஆஸ்திரேலிய சென்ற இந்திய கிரிக்கெட் அணி, இப்போது வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறது. அத்துடன் இந்திய அணியில் இருக்கும் மூன்று சீனியர் பிளேயர்களுக்கு இதுவே அவர்களின் கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணமாகவும் அமைந்திருக்கிறது. அடுத்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்த மூன்று பிளேயர்களும் இருக்க மாட்டார்கள். 3 பிளேயர்களுக்கு கடைசி சுற்றுப் பயணம் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இந்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் தான் கடைசி. இனி இந்த மூன்று பேரும் அடுத்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இருக்க மாட்டார்கள். ரோகித் சர்மாவுக்கு 37 வயது, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு தலா 36 வயதாகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து தான் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபி போட்டிக்கு ஆஸ்திரேலியா சென்று விளையாடும். அப்போதைய அணியில் இவர்கள் மூன்று பேரும் இருக்க வாய்ப்பில்லை. எனவே கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் விளையாடிய இந்த மூன்று சீனியர் பிளேயர்களும் வெறுங்கையுடன் தாயகம் திரும்பியுள்ளனர். இந்தியா அணியில் அதிரடி மாற்றம் இந்த டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் நடக்கப்போகிறது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், " இந்திய அணியில் மாற்றங்கள் நிச்சயம் இருக்கும். அடுத்த 5 மாதங்களுக்குள் இந்த மாற்றங்கள் இருக்கும். இப்போதயை சூழலில் அது என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என சொல்ல முடியாது. சிவப்பு பந்து கிரிக்கெட் போட்டி விளையாடுகிறீர்கள் என்றால் நிச்சயம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போது தான் நிறைய பயிற்சி கிடைக்கும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்க முடியாது" என தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா நீக்கம் கவுதம் கம்பீர் இப்படி கூறியிருப்பதற்கு பின்னணியில் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆடுமாறு கம்பீர் கூறினார். ஆனால், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா சீனியர் பிளேயர்களை லோக்கல் கிரிக்கெட் ஆடுமாறு வற்புறுத்துவது நல்லதல்ல என கூறினார். கடைசியில் இப்போது கம்பீர் கூறியது தான் சரி என்ற நிலைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வந்திருக்கிறது. விராட் கோலி கூட இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் அடித்தார். ஆனால் ரோகித் சர்மா வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவரை விட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அதிக ரன்கள் எடுத்திருக்கிறார். எனவே அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என விமர்சனங்கள் கடுமையாக எழுந்திருக்கிறது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ரியாக்ஷன் என்ன? என்பது கூடிய விரைவில் தெரியவரும். மேலும் படிக்க | ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசுவாரா மாட்டாரா... காயத்தின் லேட்டஸ்ட் அப்டேட் மேலும் படிக்க | இந்திய அணி கோப்பையை வெல்ல... இந்த டார்கெட்டை செட் செய்தாலே போதும்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.