வாடாமல்லி மலர் ஊட்டியில் நடைபெறும் மலர்க் கண்காட்சிகளில் ஏராளமான வண்ண வண்ண மலர்கள் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக வைக்கப்படுகின்றன. ஆனால் ஒரே ஒரு மலர் மட்டும் பூங்காவிற்கு வெளியில் பல்வேறு மக்களுக்கும் வாழ்வளித்து வருகிறது. இந்த மலர்களை ஒரு கட்டில் 10 முதல் 15 மலர்கள் வரை வைத்து ஒரு கட்டாகக் கட்டுகின்றனர். இந்த மலர்களைச் சுற்றுலாப் பயணிகளும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதனைச் சுற்றுலாப் பயணிகளும் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து இவர்களிடம் கேட்டபோது பல்வேறு மலைப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் உள்ள புதர்கள் மிகுந்த பகுதியில் இந்த மலர்கள் மலர்கின்றது. இதனை அந்த இடத்திற்குச் சென்று பறித்து வந்து விற்பனை செய்கின்றோம். இந்த மலரைக் கொண்டு போய் வைக்கும் பொழுது ஒரு ஆண்டு வரையிலும் வாடாமல் இருக்கின்றது எனச் சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர். எங்களுக்கே தெரியாத விஷயங்களை அவர்கள் தான் தெரிவிக்கின்றனர். இதனை நம்பியே நாங்கள் வாழ்வாதாரம் நடத்துகின்றோம் எனவும் கூறுகின்றனர் இந்த மலர்களை விற்பனை செய்யும் பெண்கள். இதையும் படிங்க: இவ்ளோ வெரைட்டியை சாப்பிட ஒரு வருஷமாகும்… ஒரு முட்டையை வைச்சே 365 டிஷ்ஷா… மேலும் இந்த வாடாமல்லி மலர்கள் பல்வேறு கிராமப் பகுதிகளிலும் சாலை ஓரங்களிலும் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்குகிறது. இதனை உள்ளூர் மக்கள் அனுதினமும் காண்பதால் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகள் இதனை விரும்பி பறித்துச் சென்று வீடுகளில் வைத்துக் கொள்கின்றனர். இந்த மலரின் மேற்பகுதியில் காகிதம் போன்ற அமைப்பில் உள்ளதால் காகித பூ போன்று காணப்படுகின்றது. தாவரவியல் பூங்காவின் உட்பகுதியில் பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் வாசமான மலர்கள் பல இருந்தாலும், வாசம் இல்லா மலர் ஆயினும் பலருக்கும் வாழ்வளிக்கும் மலராக வாடாமல்லி இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அகலார் பகுதியைச் சேர்ந்த அருண் கூறுகையில், “இந்த மலர் அனைத்துப் பகுதிகளிலும் மலர்கிறது. ஆனால் உள்ளூர் மக்கள் யாருக்கும் பெரிய அளவில் தெரிவதில்லை. இந்த மலரைக் கொண்டு போய் எண்ணெய் தயாரிக்கின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர், ஆனால் சரியாகத் தெரியவில்லை. இதனைச் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None
Popular Tags:
Share This Post:
2025-ல் அதிகரிக்க உள்ள மேகி நூடுல்ஸின் விலை.. எவ்வளவு, ஏன் தெரியுமா?
- by Sarkai Info
- December 22, 2024

வீதியெங்கும் வர்ண ஜாலம் செய்யும் கோலங்கள்... வண்ண வண்ண கோலப்பொடி தயாராவது இப்படி தான்...
December 23, 2024
What’s New
Spotlight
Today’s Hot
எல்ஐசி பீமா சகி யோஜனா: தகுதி, உதவித்தொகை மற்றும் அப்ளிகேஷன் விவரங்கள்...!
- By Sarkai Info
- December 16, 2024
Featured News
Latest From This Week
ரயில் டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் எதுவரை இருந்தால் டிக்கெட் உறுதியாகும்? - சிறிய கணக்கு இதோ..!
BUSINESS
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.