BUSINESS

உழவு முதல் அறுவடை வரை... விவசாயிகளுக்கு இயந்திரங்கள் குறித்த கருத்தரங்கு...

பராமரிப்பிற்கு வந்த ட்ராக்டர் வாகனங்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் அதிக அளவில் விவசாயம் செய்யக்கூடிய ஒரு முக்கியமான மாவட்டமாக விளங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் சமீப நாட்களில் விவசாயப் பொருட்கள் மற்றும் விவசாய இயந்திரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விதை விதைப்பது முதல் அறுவடை வரையிலும் விவசாய இயந்திரங்களும் செயற்பாடு குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. இதில் சிறிய அளவு தேயிலை பறிக்கும் இயந்திரம் முதல் பெரிய அளவிலான டிராக்டர்கள் புல்லர் ஆகியவை வரையிலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விவசாய இயந்திரங்களுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலமாக மானியமும் வழங்கப்பட்டு விவசாயிகள் பயனடையும் விதமாக பல்வேறு செயல்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இதையும் படிங்க: முதுகு தண்டுவட பாதிப்பால் முடங்கும் வாழ்க்கை… ஆயிரக்கணக்கானோரை மீட்ட மறுவாழ்வு மையம்… நீலகிரி பயிரிடக்கூடிய கேரட் பீட்ரூட் உருளைக்கிழங்கு ஆகியவற்றிற்கும், தேயிலைத் தோட்டங்களில் இலை பறிப்பதற்கும் நிலத்தில் உழவு செய்வது முதல் அறுவடை வரையிலும் விவசாய எந்திரங்களின் தேவை மிகவும் அதிகமானதாக உள்ளது. இந்நிலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடைபெற்றது. வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்து கக்குச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தன்னாசி கூறுகையில், “70% மானியத்தில் டிராக்டர் வாங்கியுள்ளோம். டிராக்டர் உதவியால் எளிய முறையில் விவசாயம் செய்ய முடிகிறது. 70% மானியம் அறிவித்த தமிழக அரசுக்கும், வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / வணிகம் / விவசாயம் / உழவு முதல் அறுவடை வரை... விவசாயிகளுக்கு இயந்திரங்கள் குறித்த கருத்தரங்கு... உழவு முதல் அறுவடை வரை... விவசாயிகளுக்கு இயந்திரங்கள் குறித்த கருத்தரங்கு... பராமரிப்பிற்கு வந்த ட்ராக்டர் வாகனங்கள் தேயிலைத் தோட்டங்களில் இலை பறிப்பதற்கும், நிலத்தில் உழவு செய்வது முதல் அறுவடை வரையிலும் விவசாய எந்திரங்களின் தேவை மிகவும் அதிகமானதாக உள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : September 30, 2024, 5:22 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் அதிக அளவில் விவசாயம் செய்யக்கூடிய ஒரு முக்கியமான மாவட்டமாக விளங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் சமீப நாட்களில் விவசாயப் பொருட்கள் மற்றும் விவசாய இயந்திரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விதை விதைப்பது முதல் அறுவடை வரையிலும் விவசாய இயந்திரங்களும் செயற்பாடு குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. இதில் சிறிய அளவு தேயிலை பறிக்கும் இயந்திரம் முதல் பெரிய அளவிலான டிராக்டர்கள் புல்லர் ஆகியவை வரையிலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விவசாய இயந்திரங்களுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலமாக மானியமும் வழங்கப்பட்டு விவசாயிகள் பயனடையும் விதமாக பல்வேறு செயல்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. விளம்பரம் இதையும் படிங்க: முதுகு தண்டுவட பாதிப்பால் முடங்கும் வாழ்க்கை… ஆயிரக்கணக்கானோரை மீட்ட மறுவாழ்வு மையம்… நீலகிரி பயிரிடக்கூடிய கேரட் பீட்ரூட் உருளைக்கிழங்கு ஆகியவற்றிற்கும், தேயிலைத் தோட்டங்களில் இலை பறிப்பதற்கும் நிலத்தில் உழவு செய்வது முதல் அறுவடை வரையிலும் விவசாய எந்திரங்களின் தேவை மிகவும் அதிகமானதாக உள்ளது. இந்நிலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடைபெற்றது. வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்து கக்குச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தன்னாசி கூறுகையில், “70% மானியத்தில் டிராக்டர் வாங்கியுள்ளோம். டிராக்டர் உதவியால் எளிய முறையில் விவசாயம் செய்ய முடிகிறது. 70% மானியம் அறிவித்த தமிழக அரசுக்கும், வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Agriculture , Local News , Nilgiris First Published : September 30, 2024, 5:22 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.