மகளுக்கு நடந்த அநீதி... குவைத்திலிருந்து வந்து பலி தீர்த்த தந்தை... தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு போலீசாரிடம் நியாயம் கிடைக்காததால் விரக்தியடைந்த தந்தை, குவைத்தில் இருந்து இந்தியா திரும்பி மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்பட்ட நபரைக் கொன்றுவிட்டு மீண்டும் குவைத்துக்கு பறந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அன்னமய்யா மாவட்டத்தில் நடந்த கொலைச் சம்பவம் ஆந்திர மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தில் பணிபுரியும் ஆந்திராவைச் சேர்ந்த ஆஞ்சநேய பிரசாத், தனது 12 வயது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் குவைத்தில் இருந்து இந்தியா வந்து சம்பந்தப்பட்ட நபரைக் கொன்று பழிதீர்த்துக் கொண்டுள்ளார். குவைத்தில் இருந்து இந்தியா வந்த ஆஞ்சநேய பிரசாத், குற்றவாளி என்று கூறப்பட்ட நபரைக் கொடூரமாகக் கொன்றுவிட்டு மீண்டும் குவைத்துக்கே சென்றுள்ளார். இதையும் படிங்க: இயேசு அறையப்பட்ட சிலுவை இங்கிருக்கு… தென்னகத்தின் கல்வாரியில் இவ்வளவு சிறப்புகளா… அன்னமையா மாவட்டம், ஓபுலவாரிபள்ளி மண்டலம், மங்கம்பேட் கிராமத்தைச் சேர்ந்த ஆஞ்சநேய பிரசாத், குவைத்தில் 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். குவைத்தில் பணிபுரிந்து வரும் அவர் “பிரசாத் குவைத்” என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். திருமணத்திற்குப் பிறகு, ஆஞ்சநேய பிரசாத் தனது மனைவியை குவைத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார், அவர்களுக்கு ஒரு மகள் பிறந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அவர் தனது குழந்தையை தனது மாமியாரின் பொறுப்பில் விட்டுவிட்டு, அவ்வப்போது அவர்களுக்குப் பணம் அனுப்பி உதவி வந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு, தனது அத்தையின் நிதி நிலைமை மோசமடைந்ததால், ஆஞ்சநேய பிரசாத் அவர்களையும் குவைத்துக்கு அழைத்து வந்துள்ளார். இதையடுத்து, தனது 12 வயது மகளை தனது மனைவியின் தங்கையின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார். லட்சுமி மற்றும் அவரது கணவர் வெங்கடரமணன் ஆகியோர் ஆரம்பத்தில் குழந்தையை நன்றாகக் கவனித்துக் கொண்டாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள், அவளைப் பராமரிக்க மறுத்துவிட்டனர். இதையும் படிங்க: டாக்டர் பீஸ் வேணாம்… இந்த காலத்திலும் இலவசமாக சேவை வழங்கும் மருத்துவமனை… இதையடுத்து, குவைத்தில் இருந்து அன்னமய்யா மாவட்டத்திற்குச் சென்ற குழந்தையின் தாய், லட்சுமியின் மாமா தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததைக் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து தாயும், மகளும் ஓபுலவாரிபள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இருப்பினும், போலீசார் குற்றவாளிகளை எச்சரித்து விடுவித்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறையிடம் நியாயம் கிடைக்காததால் மனமுடைந்த ஆஞ்சநேய பிரசாத், பிரச்சனையை கையில் எடுக்க முடிவு செய்தார். இதையடுத்து, கடந்த டிசம்பர் 6ஆம் தேதி, குவைத்தில் இருந்து இந்தியா வந்த ஆஞ்சநேய பிரசாத், குற்றவாளி என்று கூறப்படும் நபரை இரும்பு கம்பியால் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அதே நாள் மாலை குவைத்துக்குத் திரும்பியுள்ளார். கொலை குறித்து விசாரணையை முடுக்கி விட்ட போலீசாருக்கு ஆரம்பத்தில் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், ஆஞ்சநேய பிரசாத் தனது யூடியூப் சேனலில் ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய வீடியோவை வெளியிட்டு, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதையும் படிங்க: NIACL Recruitment: டிகிரி இருந்தா போதும் ரூ.40,000 சம்பளம்… மத்திய அரசின் NIACLஇல் 500 காலிப்பணியிடங்கள்… இதையடுத்து, ஆஞ்சநேய பிரசாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் நீதி அமைப்பு, காவல்துறையின் செயலற்ற தன்மை மற்றும் மனித உரிமைகள் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None
Popular Tags:
Share This Post:

Tamil Live Breaking News: இரங்கல் தீர்மானத்திற்கு பின் சட்டப்பேரவை ஒத்திவைப்பு
January 7, 2025
ஃபீஸ் செலுத்தாத மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. இப்படியும் ஒரு பள்ளியா? பெற்றோர் விளாசல்
December 22, 2024What’s New
Spotlight
பணம், பவருக்காக 12 பேர் கொலை... குஜராத்தை உலுக்கிய சம்பவம்...
- by Sarkai Info
- December 20, 2024
ஹரியானா முன்னாள் முதல்வர் சௌதாலா காலமானார்; நயாப் சிங் சைனி இரங்கல்
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
Featured News
மகாராஷ்டிராவில் பயங்கர விபத்து; அரபிக்கடலில் மூழ்கிய சுற்றுலாப் படகு
- By Sarkai Info
- December 18, 2024
Latest From This Week
மாணவியை 15 முறை கடித்த எலி... தடுப்பூசி போட்டதால் வந்த புதிய சிக்கல் - அதிர்ச்சி சம்பவம்!
NATIONAL
- by Sarkai Info
- December 18, 2024
“நான் ராஜினாமா செய்ய தயார்..!” - அம்பேத்கர் சர்ச்சை விவகாரத்தில் அமித்ஷா அதிரடி
NATIONAL
- by Sarkai Info
- December 18, 2024
பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுத்தால் உங்கள் மீது வழக்கு பாயும்… இந்தியாவில்தான் இந்த அதிரடி நடவடிக்கை…
NATIONAL
- by Sarkai Info
- December 17, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.