SPORTS

சாம்போ தற்காப்பு விளையாட்டு போட்டி..! தேசிய அளவில் தேர்ச்சி பெற்ற இளம் வீரர்கள்..!

சாம்போ போட்டி தமிழ்நாடு சாம்போ அசோசியேஷன் நடத்திய மூன்றாவது ‌ மாநில அளவிலான தற்காப்பு விளையாட்டு போட்டி தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மகாலில் நடைபெற்றது.‌ இப் போட்டியை தஞ்சை சட்டமன்ற உறுப்பினரும் சாம்போ அசோசியேஷன் தலைவருமான டி.கே. ஜி நிலைமேகம் மற்றும் மாநில செயலாளர் முகமது அனஸ் போட்டியை துவங்கி வைத்தனர். இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களிலிருந்து வீரர் வீராங்கனைகள் கலந்து வெற்றி பெற்று ஹரியானாவில் நடக்க உள்ள தேசிய அளவிலான சாம்போ போட்டிக்கு தேர்ச்சி பெற்றனர். அந்த வகையில் தஞ்சையில் சாம்பியன் ஆர்ட்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த8 பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான சாம்போ போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 11ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் ராஜ்,8ம் வகுப்பு படிக்கும் ஜெனித், மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் மாணவி வர்ஷினி ஆகிய மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றும் மற்ற மாணவர்கள் சில்வர் மற்றும் வெண்கல பதக்கம் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் இது குறித்து மாணவர்கள் கூறுகையில், சாம்போ ஒரு ஒலிம்பிக் போட்டியாக உள்ளது. இந்த தற்காப்பு விளையாட்டு போட்டியைக் கற்றுக்கொள்ள தினந்தோறும் பயிற்சிக்கு வகுப்புகள் செல்வோம்.இந்த விளையாட்டு எங்களுக்கு எளிமையாக கற்றுக்கொள்ளும் வகையிலும் இருப்பதால் தொடர்ந்து 2 ஆண்டுகளாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதன் விளைவாக மாவட்ட அளவிலான போட்டியில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் தேசிய அளவிலும் பங்கேற்று வெற்றி பெறுவதே எங்களது இலக்கு நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கூறினர்.‌ உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / விளையாட்டு / மற்ற விளையாட்டுகள் / சாம்போ தற்காப்பு விளையாட்டு போட்டி..! தேசிய அளவில் தேர்ச்சி பெற்ற இளம் வீரர்கள்..! சாம்போ தற்காப்பு விளையாட்டு போட்டி..! தேசிய அளவில் தேர்ச்சி பெற்ற இளம் வீரர்கள்..! சாம்போ போட்டி Sambo competition |வரும் அக்டோபர் மாதம் ஹரியானாவில் தேசிய அளவில் நடைபெற உள்ள சாம்போ போட்டியில் தஞ்சையை சேர்ந்த 8 பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 26, 2024, 6:58 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Anandh R தொடர்புடைய செய்திகள் தமிழ்நாடு சாம்போ அசோசியேஷன் நடத்திய மூன்றாவது ‌ மாநில அளவிலான தற்காப்பு விளையாட்டு போட்டி தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மகாலில் நடைபெற்றது.‌ இப் போட்டியை தஞ்சை சட்டமன்ற உறுப்பினரும் சாம்போ அசோசியேஷன் தலைவருமான டி.கே. ஜி நிலைமேகம் மற்றும் மாநில செயலாளர் முகமது அனஸ் போட்டியை துவங்கி வைத்தனர். இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களிலிருந்து வீரர் வீராங்கனைகள் கலந்து வெற்றி பெற்று ஹரியானாவில் நடக்க உள்ள தேசிய அளவிலான சாம்போ போட்டிக்கு தேர்ச்சி பெற்றனர். விளம்பரம் அந்த வகையில் தஞ்சையில் சாம்பியன் ஆர்ட்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த8 பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான சாம்போ போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 11ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் ராஜ்,8ம் வகுப்பு படிக்கும் ஜெனித், மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் மாணவி வர்ஷினி ஆகிய மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றும் மற்ற மாணவர்கள் சில்வர் மற்றும் வெண்கல பதக்கம் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் இது குறித்து மாணவர்கள் கூறுகையில், சாம்போ ஒரு ஒலிம்பிக் போட்டியாக உள்ளது. இந்த தற்காப்பு விளையாட்டு போட்டியைக் கற்றுக்கொள்ள தினந்தோறும் பயிற்சிக்கு வகுப்புகள் செல்வோம்.இந்த விளையாட்டு எங்களுக்கு எளிமையாக கற்றுக்கொள்ளும் வகையிலும் இருப்பதால் தொடர்ந்து 2 ஆண்டுகளாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதன் விளைவாக மாவட்ட அளவிலான போட்டியில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் தேசிய அளவிலும் பங்கேற்று வெற்றி பெறுவதே எங்களது இலக்கு நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கூறினர்.‌ விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Sports , thanjavur First Published : August 26, 2024, 6:58 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.