SPORTS

“எங்களது வெற்றி இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தும்” - ஹாக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் நம்பிக்கை!

பதக்கங்களுடன் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் இந்திய அணி பெற்ற வெற்றி இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் என்று கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது. லீக் சுற்றில் முக்கியமான ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்தியா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதியில் இந்தியா மற்றும் கிரேட் பிரிட்டன் அணிகள் மோதின. இந்த போட்டியில், இரு அணிகளும் தலா 1 கோல் அடித்திருந்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா 4-2 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதி சுற்றில் வலுவான ஜெர்மனியை இந்தியா எதிர்கொண்டது. தொடக்கத்தில் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், அடுத்தடுத்து தவறுகளை செய்தனர். இதனால் கிடைத்த ஷூட் அவுட் வாய்ப்புகளை பயன்படுத்தி ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தனர். அரையிறுதி சுற்றில், இந்தியா 3-2 என்ற கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வியிடைந்தது. இதையடுத்து வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஸ்பெயினை வீழ்த்தி பதக்கத்தை வென்றது இந்திய அணி. 2020 ஆண்டு டோக்யோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது. அதற்கு முன்பாக 41 ஆண்டுகளாக இந்திய அணி எந்த பதக்கத்தையும் வெல்லாமல் இருந்ததால் அணிக்கு அதிக அழுத்தம் காணப்பட்டது. அடுத்தடுத்து 2 ஒலிம்பிக்குகளில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றிருப்பது ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய ஹாக்கி அணியின் ஹீரோக்களில் ஒருவராக கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அளித்துள்ள பேட்டியில், இந்தியா வென்ற பதக்கங்கள் இளம் தலைமுறையினருக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் ஹாக்கி அணியின் வெற்றிக்கதையை இளம் தலைமுறைக்கு சொல்ல வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியுள்ளார் ஸ்ரீஜேஷ். இந்திய ஹாக்கி அணியின் தடுப்பு சுவராக இருக்கும் ஸ்ரீஜேஷ், அடுத்ததாக அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.