SPORTS

“விளையாட்டு வீரர்கள் தான் உடல் எடையை கட்டுக்கோப்பாக நிர்வகிக்க வேண்டும்” - பி.டி.உஷா

வினேஷ் போகத் - பி.டி உஷா மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான், போட்டிகளுக்கு முன்பு தனது உடல் எடையை சரியாக நிர்வகித்து இருக்க வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டித் தொடரில் 50 கிலோ எடைப்பிரிவினருக்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்துகொண்டார். அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்பு 100 கிராம் எடை அதிகம் இருப்பதாகக் கூறி, தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையும் படிக்க: ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் 5வது இடம்… ஆனாலும் பதக்கம் வென்ற வீராங்கனை… எப்படி தெரியுமா? இதனால், அவருக்கு எந்த பதக்கமும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க உத்தரவிடக் கோரி, விளையாட்டுப் போட்டிகளுக்கான தீர்ப்பாயத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தார். இதன் மீதான தீர்ப்பு நாளை (ஆகஸ்ட் 13) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள்தான் உடல் எடையை கட்டுக்கோப்பாக நிர்வகிக்க வேண்டும் என்றும் மருத்துவக் குழுவினர் இதற்கு பொறுப்பாக முடியாது என்றும் பி.டி.உஷா கூறியுள்ளார். உடல் எடை அதிகரிப்பால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஒலிம்பிக் நிர்வாகம் எப்படி பொறுப்பேற்கும் என்றும் பி.டி.உஷா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் செய்திகள் / விளையாட்டு / மற்ற விளையாட்டுகள் / “விளையாட்டு வீரர்கள் தான் உடல் எடையை கட்டுக்கோப்பாக நிர்வகிக்க வேண்டும்” - பி.டி.உஷா “விளையாட்டு வீரர்கள் தான் உடல் எடையை கட்டுக்கோப்பாக நிர்வகிக்க வேண்டும்” - பி.டி.உஷா வினேஷ் போகத் - பி.டி உஷா அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்பு 100 கிராம் எடை அதிகம் இருப்பதாகக் கூறி, தகுதி நீக்கம் செய்யப்பட்டார் வினேஷ் போகத். படிக்கவும் … 1-MIN READ Tamil International Last Updated : August 12, 2024, 4:54 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான், போட்டிகளுக்கு முன்பு தனது உடல் எடையை சரியாக நிர்வகித்து இருக்க வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டித் தொடரில் 50 கிலோ எடைப்பிரிவினருக்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்துகொண்டார். அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்பு 100 கிராம் எடை அதிகம் இருப்பதாகக் கூறி, தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையும் படிக்க: ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் 5வது இடம்… ஆனாலும் பதக்கம் வென்ற வீராங்கனை… எப்படி தெரியுமா? விளம்பரம் இதனால், அவருக்கு எந்த பதக்கமும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க உத்தரவிடக் கோரி, விளையாட்டுப் போட்டிகளுக்கான தீர்ப்பாயத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தார். இதன் மீதான தீர்ப்பு நாளை (ஆகஸ்ட் 13) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள்தான் உடல் எடையை கட்டுக்கோப்பாக நிர்வகிக்க வேண்டும் என்றும் மருத்துவக் குழுவினர் இதற்கு பொறுப்பாக முடியாது என்றும் பி.டி.உஷா கூறியுள்ளார். உடல் எடை அதிகரிப்பால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஒலிம்பிக் நிர்வாகம் எப்படி பொறுப்பேற்கும் என்றும் பி.டி.உஷா கேள்வி எழுப்பியுள்ளார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Olympic 2024 , Paris Olympics 2024 , Vinesh Phogat First Published : August 12, 2024, 4:54 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.