SPORTS

பங்களாதேஷ் மகளிர் அணியை பந்தாடிய இந்தியா... இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது!

பங்களாதேஷ் அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பை அரையிறுதி போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி, இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மகளிருக்கான ஆசிய கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி பங்களாதேஷ் அணியை இலங்கையில் உள்ள ரங்கிரி தம்புள்ளா மைதானத்தில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஆனால் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதையும் படிக்க: டி20 கேப்டனாக சூர்யகுமாரை கவுதம் கம்பீர் தேர்வு செய்தது ஏன்? - சீக்ரெட்டை உடைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்! அந்த அணியின் கேப்டன் நிகர் சுல்தானா அதிகபட்சமாக 32 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஷோர்னா அக்டர் 19 ரன்களும் எடுத்தனர். இந்திய பவுலர்கள் சார்பில் ரேணுகா சிங், ராதா யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பூஜா, தீப்தி சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர். இதனால் பங்களாதேஷ் அணி 20 ஓவர்களின் முடிவில் 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ஓப்பனர்களான ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டினர். ஷஃபாலி வர்மா 26 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 55 ரன்களும் எடுத்து, 11 ஓவர்களில் அரையிறுதி போட்டியை வென்றனர். இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இன்று நடைபெறும் பாகிஸ்தான் - இலங்கை மகளிர் அணி போட்டியில், வெற்றி பெறும் அணி வரும் 28ஆம் தேதி இந்திய அணியுடன் பலபரிட்சை நடத்தவுள்ளது. தமிழ் செய்திகள் / விளையாட்டு / கிரிக்கெட் / பங்களாதேஷ் மகளிர் அணியை பந்தாடிய இந்தியா... இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது! பங்களாதேஷ் மகளிர் அணியை பந்தாடிய இந்தியா... இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது! பங்களாதேஷ் அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களின் முடிவில் 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : July 26, 2024, 8:43 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் ஆசிய கோப்பை அரையிறுதி போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி, இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மகளிருக்கான ஆசிய கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி பங்களாதேஷ் அணியை இலங்கையில் உள்ள ரங்கிரி தம்புள்ளா மைதானத்தில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஆனால் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதையும் படிக்க: டி20 கேப்டனாக சூர்யகுமாரை கவுதம் கம்பீர் தேர்வு செய்தது ஏன்? - சீக்ரெட்டை உடைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்! விளம்பரம் அந்த அணியின் கேப்டன் நிகர் சுல்தானா அதிகபட்சமாக 32 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஷோர்னா அக்டர் 19 ரன்களும் எடுத்தனர். இந்திய பவுலர்கள் சார்பில் ரேணுகா சிங், ராதா யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பூஜா, தீப்தி சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர். இதனால் பங்களாதேஷ் அணி 20 ஓவர்களின் முடிவில் 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ஓப்பனர்களான ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டினர். விளம்பரம் தளபதி விஜய் என்ன படித்திருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா.? மேலும் செய்திகள்… ஷஃபாலி வர்மா 26 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 55 ரன்களும் எடுத்து, 11 ஓவர்களில் அரையிறுதி போட்டியை வென்றனர். இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இன்று நடைபெறும் பாகிஸ்தான் - இலங்கை மகளிர் அணி போட்டியில், வெற்றி பெறும் அணி வரும் 28ஆம் தேதி இந்திய அணியுடன் பலபரிட்சை நடத்தவுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Asia cup , India vs Bangladesh , Indian women cricket First Published : July 26, 2024, 8:43 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.