SPORTS

”எனக்கு பிடித்த கேப்டன் தோனி, ரோகித், விராட் எல்லாம் இல்லை” - ஜஸ்பிரித் பும்ரா ஓபன் டாக்!

இந்திய அணியின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கும் ஜஸ்பிரித் பும்ரா, கடந்த 2016ஆம் ஆண்டு தோனி கேப்டனாக இருந்தபோது, இந்திய அணியில் அறிமுகமானார். அதன்பிறகு கேப்டனாக இருந்தபோது, டெஸ்ட் போட்டிகளில் முன்னேற்றம் கண்ட பும்ரா, அதன்பிறகு ரோகித் கேப்டன்சியில் சிறப்பாக விளையாடி, இந்தியாவின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உலகின் தலைசிறந்த டி20 மற்றும் டெஸ்ட் பந்து வீச்சாளர் என்று பும்ராவை வெளிநாட்டு வீரர்களும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அண்மையில் நடந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பும்ரா. இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பும்ரா பங்கேற்றார். அப்போது, தோனி, கோலி, ரோகித் ஆகிய மூவரில் பிடித்த கேப்டன் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு, ”என்னுடைய பார்வையில் எனக்கு பிடித்த கேப்டன் யாரென்றால், அது நான் தான். ஏனென்றால், நானும் சில போட்டிகளில் கேப்டனாக விளையாடி இருக்கிறேன். என்னைவிட சிறந்த கேப்டன்கள் இருந்தாலும், எனக்கு நான் தான் ஃபேவரைட்” என்று தெரிவித்தார். மேலும், தோனியின் தலைமையின் கீழ் விளையாடியபோது பாதுகாப்பாக உணர்ந்ததாகவும், விராட் தலைமையின் கீழ் விளையாடியபோது ஃபிட்னஸ் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார். இதையும் படிங்க: 12 கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? - இணையத்தில் வைரலாகும் பில்! அதேபோல, ”ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் கொஞ்சம் வித்தியாசமானது. ஏனென்றால், இளம் வீரர்கள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து, அதற்கேற்ப செயல்படுவார். அதேபோல், தவறுகளில் இருந்துதான் அதிகம் கற்றுக் கொள்வார். அணியில் உள்ள ஒவ்வொரு வீரரின் கருத்தையும் கேட்டுக் கொண்டு செயல்படுவார். அவருக்கு கீழ் நீண்டகாலம் விளையாடியது எனக்கு பெருமையான விஷயம். என்னைப் பொருத்தவரை 3 கேப்டன்களும் இந்திய அணியை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்கள்” என்று பும்ரா தெரிவித்தார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.