சுதந்திரம் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் ஏற்றப்படும் தேசிய கொடிக்கு என்று தனித்துவமான சிறப்புகள் உள்ளது. ஒரு நாட்டின் அடையாளமாக பார்க்கப்படும் தேசிய கொடிக்கு என்று வரலாறு இருக்கும். அந்த வகையில் இந்திய தேசிய கொடிக்கும் ஒரு தனித்துவ வரலாறு இருக்கிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்து, நள்ளிரவில் தேசபக்தி நிறைந்து ஏற்றப்பட்ட இந்திய தேசிய கொடியை வடிவமைந்தவர் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கையா. பிங்கலி வெங்கையா, ஆகஸ்ட் 2, 1876 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் இன்றைய மச்சிலிப்பட்டினம் நகருக்கு அருகிலுள்ள பட்லபெனுமருவில் பிறந்தார். அவர் ஒரு விவசாயி, புவியியலாளர். மச்சிலிப்பட்டினத்தில் உள்ள ஆந்திர தேசிய கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். இவர் ஜப்பானிய மொழியில் சரளமாக பேசுக்கூடியவர். இதனால் அவர் ‘ஜப்பான் வெங்கையா’ என்று அழைக்கப்பட்டார். பிங்கலி வெங்கையா பிரிட்டிஷ் இந்திய இராணுவ சிப்பாயாக போரில் ஈடுபட தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். தென்னாப்பிரிக்காவில், யூனியன் ஜாக் பிரிட்டிஷ் வீரர்களிடையே உருவான தேசிய உணர்வு அவரை ஈர்த்தது. சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட வெங்கையா, தேசியக் கொடியின் பல மாதிரிகளை வடிவமைத்தார். 1921 ஆம் ஆண்டு விஜயவாடாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் மகாத்மா காந்தி ஒரு வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்தார். மகாத்மாவுக்கு பிங்கலி வெங்கையா வழங்கிய பதிப்பில், இரண்டு கோடுகள் (சிவப்பு மற்றும் பச்சை) மற்றும் மையத்தில் காந்திய காதர் ராட்டை சக்கரம் இருந்தது. காந்தியின் ஆலோசனையின் பேரில், வெங்கய்யா கொடியில் ஒரு வெள்ளை பட்டையைச் சேர்த்தார். அந்த தினத்தில் இருந்துதான் இந்தியாவிற்கான கொடி மூவர்ணக் கொடியாக மாறியது. 1921 முதல் அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பிங்கலி வெங்கையா கொடி முறைசாரா முறையில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் 1931 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மூவர்ணக் கொடியை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது. இது காந்தியின் அகிம்சை சுதந்திர இயக்கத்தின் சின்னமாக மாறியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வெங்கையா 1963 ஆம் ஆண்டில் மறதியால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையும் படிக்க: சப்ஸ்கிரைபர்களை அதிகரிக்க யூடியூபர் எடுத்த வீடியோ… விசாரணையில் திடீர் அந்த பல்ட்டி… நடந்தது என்ன? ஆனால் அவரது நினைவுகள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுவிட்டது. அவரது நினைவாக 2009இல் அரசின் சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டது. 2014 இல் அகில இந்திய வானொலியின் விஜயவாடா நிலையத்திற்கு அவரது பெயரிடப்பட்டது. None
Popular Tags:
Share This Post:
பிரதமர் மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
August 27, 2024உக்ரைன் பயணம், வங்கதேச நிலவரம் தொடர்பாக அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி பேச்சு
August 27, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- August 18, 2024
-
- August 18, 2024
-
- August 17, 2024
Featured News
Latest From This Week
ஒருவரின் கால்களைப் பார்த்தே அடையாளத்தை கூறும் கேரள ஆட்டோ ஓட்டுனர்
NATIONAL
- by Sarkai Info
- August 14, 2024
Independence Day 2024 | இந்திய மண்ணில் முதன்முறையாக தேசிய கொடி ஏற்றப்பட்ட இடம் எது தெரியுமா?
NATIONAL
- by Sarkai Info
- August 14, 2024
Tamil Live Breaking News : திருச்சியில் சீமான் மீது வழக்கு பதிவு
NATIONAL
- by Sarkai Info
- August 14, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.