பாம்பு பிடிக்கும் இளைஞர் பாம்பு என்றாலே படையே நடுங்கும் என கேள்விப்பட்டிருப்போம். எவ்வளவு தைரியமான நபராக இருந்தாலும் பாம்பை பார்த்து பயம் வந்துவிடும். ஆனால் பாம்புகளை மீட்பதற்காகவே சில குழுவினர் பணியாற்றி வருகின்றனர் . இவர்கள் பாம்புகளை மீட்டு அவற்றை காடுகளில் கொண்டு சென்று விடுவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒருவர் 656க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் மாணவர் நிகிலா குமார் தான் அந்த இளைஞர். இவர் அத்தாணி நகர், சித்தார்த்தா காலனியைச் சேர்ந்தவராவார். வனவிலங்கு பாதுகாப்பாளரான நிகிலா குமாருக்கு ஊர்வன மீது அதிக பிரியம். 14 வயதில் பள்ளிக்கு வந்த பாம்பை பிடித்து காட்டில் விட்டுள்ளார், சக மாணவர்களை பார்த்து பயம் கொள்ளாமல் தைரியமாக பாம்பை பிடித்துள்ளார். அங்கிருந்து தொடங்கிய பாம்பு மீட்பு இன்று 656 ஊர்வனவற்றைக் காப்பாற்ற உத்வேகம் அளித்துள்ளது. குறிப்பாக, விஷம் நிறைந்த நாகப்பாம்புகளைப் பாதுகாப்பதில் அவருக்கு அலாதியான ஆர்வம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். நிகிலா குமார், இவ்வளவு இளம் வயதிலேயே 600க்கும் மேற்பட்ட பாம்புகளைக் காப்பாற்றிய ஊர்வன பிரியர். வனவிலங்குகளைப் பாதுகாப்பது அவரது அசைக்க முடியாத அன்பு. 24 வயதான நிகிலா குமார், தற்போது பாகல்கோட் மாவட்டம், தெரடாலா நகரில் உள்ள ஜேபிஎம் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து கொண்டிருக்கிறார். இதையும் வாசிக்க : 80’ஸ் கிட்ஸ் முதல் 2 K கிட்ஸ் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் உணவகம் BSF வீரர் மகாதேவின் மூத்த மகன் நிகிலா குமார் பாம்பு பிடிப்பதில் நிபுணராக மாறியுள்ளார். இவரது அசாத்திய திறனை கண்ட கிராம மக்கள் இவரை ஸ்னேக் நிகிலா குமார் என்று பெயர் வைத்துள்ளனர். நிகிலா குமார் தனது 12 வயதிலேயே இளம் வயதிலேயே பாம்பு மீட்பவர் என்ற பட்டத்தை வாங்கியுள்ளார். பாம்புகளை மீட்பது மட்டுமன்றி, ஊர்வனங்கள், ஆதரவின்றி சுற்றி திரியும் தெரு நாய்களை மீட்டுப்பது, அவைகளுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் உணவு கொடுப்பது உள்ளிட்ட பணிகளையும் தனது முழு மனதுடன் செய்து வருகிறார். மேலும் இதுகுறித்து பேட்டியளித்த நிகிலா குமார், தனது 14 வயதிலேயே விலங்குகளை மீட்கும் பணிகளை செய்து வருவதாகவும், அடிபட்டு கிடைக்கும் தெரு நாய்களை கண்டால் கூட அதனை அழைத்து சென்று சிகிச்சை அளித்து சரியாகும் வரை பார்த்து பின்னர் அதனுடைய வாழ்விடத்தில் கொண்டு சென்று விடுவதாகவும் கூறியுள்ளார். மேலும் விலங்குகளை மீட்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக மத்திய அரசின் பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் என்ற விருதையும் நிகிலா குமார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None
Popular Tags:
Share This Post:
பிரதமர் மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
August 27, 2024உக்ரைன் பயணம், வங்கதேச நிலவரம் தொடர்பாக அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி பேச்சு
August 27, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- August 18, 2024
-
- August 18, 2024
-
- August 17, 2024
Featured News
Latest From This Week
ஒருவரின் கால்களைப் பார்த்தே அடையாளத்தை கூறும் கேரள ஆட்டோ ஓட்டுனர்
NATIONAL
- by Sarkai Info
- August 14, 2024
Independence Day 2024 | இந்திய மண்ணில் முதன்முறையாக தேசிய கொடி ஏற்றப்பட்ட இடம் எது தெரியுமா?
NATIONAL
- by Sarkai Info
- August 14, 2024
Tamil Live Breaking News : திருச்சியில் சீமான் மீது வழக்கு பதிவு
NATIONAL
- by Sarkai Info
- August 14, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.