ஏஐ பேனா உலகில் எழுதப் படிக்க தெரியாதவர்களே கிடையாது என்ற நிலையை உருவாக்கும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தில் பேனா ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வங்கிகள், தபால் நிலையங்களுக்குச் சென்றால் தான் தெரியும் ஊரில் இத்தனை பேருக்கு எழுதப்படிக்க தெரியாதா என்று. ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் அளவுகூட எழுதப் படிக்க தெரியாத அவர்களுக்காக, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது எழுத்தறிவு பேனா. அடுத்த 16 ஆண்டுகளில் உலகில் கல்வியறிவு இல்லாதவர்களே கிடையாது என்ற நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மீடியா மாங்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உலக எழுத்தறிவு அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் இந்த சாதனத்தை உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டெமோ வீடியோவில், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுகோல்கள் மீது பொருத்தும் வகையில் ஒரு டிஜிட்டல் திரைகொண்ட கருவி அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள மைக்ரோ போன், நாம் சொல்லும் வார்த்தையை உள்வாங்கிக் கொள்கிறது. பின்னர், இடதுபுறம் உள்ள பொத்தானை அழுத்தும்போது, வார்த்தைகளை எழுத்துக்களாக ஏஐ தொழில்நுட்பம் மாற்றி டிஜிட்டல் திரையில் காட்டுகிறது. அந்த வார்த்தையை படிப்பறிவு இல்லாதவர்கள் அப்படியே பார்த்து எழுத முடியும். இதில் என்ன பெரிய சிறப்பு இருக்கிறது. செல்போனிலேயே இந்த வசதி உள்ளது என்று பலர் எண்ணலாம். செல்போனில் செயலிகளை திறந்து அதில் மைக் வசதியை தேடி பின்னர் வார்த்தைகளை பேசி எழுத்துக்களாக மாற்ற வேண்டும். ஆனால், ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் மட்டுமே போதும் என்ற எளிமையான வடிவமைப்பே இந்த எழுத்தறிவு பேனாவின் சிறப்பு என்று கூறுகிறார்கள் வடிவமைப்பாளர்கள். இந்த எழுத்தறிவு பேனாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் கிடைக்கப்பெறும் மற்ற பயன்கள் குறித்து வருங்காலங்களில் ஒவ்வொன்றாக விவரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எழுத்தறிவு பேனாவில் உள்ள திரை, ஆங்கில எழுத்துக்களை மட்டுமே காட்டும் நிலையில், மற்ற மொழிகளுக்கும் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து இதுவரை விவரிக்கப்படவில்லை. எழுத்தறிவு பேனா, கல்வியறிவு இல்லாதவர்கள் எழுதி படிக்கவும், மீண்டும் மீண்டும் எழுதி கற்றுக்கொள்ளவும் பெரிதும் உதவும் என்றும் உலக எழுத்தறிவு அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ கே தெரிவித்துள்ளார். இது கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முக்கிய மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். None
Popular Tags:
Share This Post:
நாய்ஸ் என்1 ப்ரோ: Active Noise Cancellation, 60 மணிநேரம் வரை மொத்த பேட்டரி ஆயுள்!
August 26, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- August 24, 2024
-
- August 17, 2024
-
- August 17, 2024
Featured News
Latest From This Week
கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கும் Meta AI... இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தும் முறை
TAMIL
- by Sarkai Info
- August 14, 2024
எவரெஸ்டை விட 3 மடங்கு பெரிய மலை! விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு!!
TAMIL
- by Sarkai Info
- August 13, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.