LIFESTYLE

Independence Day 2024 : சுதந்திர தின ஸ்பெஷல் டிஷ்.. மூவர்ணத்தில் மக்ரூன்ஸ் ரெசிபி செய்வது எப்படி?

மூவர்ண மக்ரூன்ஸ் ஆகஸ்ட் மாதம் தொடங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் சுதந்திர தினம் வர இருக்கிறது. குழந்தைகளுக்கு இந்திய சுதந்திரம் அடைந்த கதைகளையும், சுதந்திரம் பெறுவதற்காக நம் மக்கள் பட்ட கஷ்டங்களை சொல்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. அதே நேரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு கண்களுக்கும் நாவிற்கு விருந்து அளிக்கும் கிரேட்டிவ் சமையல் செய்யவும் நல்ல வாய்ப்பு. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் இந்தியாவின் மூவர்ண கோடி பறப்பதை பார்க்க முடியும். முக்கிய வரலாற்று நினைவுச்சின்னங்களை மூவர்ண விளக்குகளால் அலங்கரிப்பது, பெரிய தேசிய கொடிகளை ஏற்றுவது என்று இருக்கும். நம் சமையலறை தட்டுகளும் மூவர்ணத்தில் மிளிர்ந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று மக்ரூன்கள். மொறுப்புறுப்பான பிஸ்கட்டுகள் இடையே சுவையான க்ரீம் வைத்து பரிமாறப்படும் மக்ரூன் பிடிக்காத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். அதே மக்ரூன்களை மூவர்ணத்தில் செய்வதற்கான டிப்ஸ் தான் தர இருக்கிறோம். மூவர்ண மக்ரூன்கள் செய்யத் தேவையான பொருட்கள் 1 கப் பாதாம் மாவு 1.5 கப் தூள் சர்க்கரை 3 முட்டையின் வெள்ளைக்கரு 1/4 தேக்கரண்டி கிரீம் 3 டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை பச்சை உணவு நிறம் துளசி 1/4 கப் ஆரஞ்சு உணவு நிறம் செம்பருத்தி உலர வைத்து பொரித்தது 3 ஸ்பூன் கிரீம் சீஸ் நிரப்புவதற்கு: 2 டீஸ்பூன் உப்பு சேர்க்காத வெண்ணெய் 100 கிராம் கிரீம் சீஸ் 1 கப் தூள் சர்க்கரை 1 தேக்கரண்டி வெண்ணிலா சாறு துளசி சாறு ஆரஞ்சு / செம்பருத்தி சாறு 2 தேக்கரண்டி கனமான கிரீம் செய்முறை : ஒரு பாத்திரத்தில் பாதாம் மாவு மற்றும் தூள் சர்க்கரை சேர்த்து கலக்கவும். அதே நேரம் இன்னொரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் போட்டு ஸ்பூன் அல்லது பீட்டர் கொண்டு அடிக்கத் தொடங்குங்கள். முட்டையின் வெள்ளைக்கரு கொஞ்சம் கொஞ்சமாக நுரை வர ஆரம்பித்தவுடன், கிரீம் சேர்க்கவும். சிறிது நேரத்தில், முட்டையின் வெள்ளைக்கருவில் இருந்து மிருதுவான கிரீம் உருவாகும். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக சக்கரை சேர்த்து பீட் செய்யுங்கள். பின்னர் அதில் பாதாம் மாவு-சர்க்கரை கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்துகொள்ளுங்கள். கட்டி விழாமல் பொடிகள் அப்படியே தங்காமல் முழுமையாக கலக்கி கொள்ளுங்கள். இதையும் படிங்க : Independence Day 2024 : சுதந்திர தினத்திற்கு ஏற்ற அழகான ரங்கோலி கோலங்களின் தொகுப்பு.! மாவை 3 பகுதிகளாகப் பிரித்து, ஒன்றை அப்படியே விட்டுவிட்டு, மீதமுள்ள 2 பகுதிகளில் ஒன்றோடு செம்பருத்தி பூவின் பொடி மற்றும் கொஞ்சம் ஆரஞ்சு சாறு சேர்த்து கலக்கி வைத்துகொள்ளுங்கள். வேண்டும் என்றால் புட் கலர் சேர்த்துக்கொள்ளுங்கள். மீதம் உள்ள மாவில் துளசியை அரைத்து அதன் சாறை சேர்த்துக்கொள்ளுங்கள். அதற்கும் நிறம் வேண்டும் என்றால் சேர்த்துக்கொள்ளுங்கள் 1/2 அங்குல வட்ட முனையுடன் பொருத்தப்பட்ட 3 வெவ்வேறு பைப்பிங் பைகளுக்கு மாற்றவும். குக்கீ தாள்களில் மாவை பைப் செய்யவும். பைப்பிங் பைகள் இல்லை என்றால் சாதாரண பால் கவர் அல்லது பாலிதீன் கவரில் முனையை மட்டும் வெட்டி அதை பயன்படுத்துங்கள். மெக்கரோன்களை அறை வெப்பநிலையில் 45 நிமிடங்களுக்கு மைக்ரோவேவ் ஓவனில் வைத்து 300 டிகிரிக்கு முன்கூட்டியே சூடாக்கவும். குண்டுகள் முழுவதுமாக காய்ந்தவுடன், 300 F டிகிரியில் 15-17 நிமிடங்களுக்கு மக்கரோன்களை வேக வைக்கவும் குக்கரில் வைப்பவர்கள் 30 நிமிடம் குக்கரை சூடேற்றி பின்னர் 35 நிமிடங்கள் வரை பேக் செய்தால் போதுமானதாக இருக்கும். இல்லை என்றால் கூடுதலாக சிறிது நேரம் வேகா வைக்க வேண்டி இருக்கும். மிதமான தீயில் வேகா வைப்பது முக்கியம். கிரீம் சீஸ்தயார் செய்ய: வெண்ணெய் மற்றும் கிரீம் சீஸ் இரண்டையும் கலந்து பீட்டரில் போட்டு மென்மையான கிரீம் வரும் வரை அடிக்கவும். பிறகு அதில் தூள் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பீட் செய்யவும். கூம்பு போல நிற்கும் பதம் வந்ததும் அதையும் மூன்றாக பிரித்து ஒன்றில் வெண்ணிலா சாறு சேர்த்து கலக்கவும். இரண்டாவது பங்கில் துளசி சாறு, மூன்றாவது பங்கில் ஆரஞ்சு மற்றும் செம்பருத்தி சாறு சேர்த்து கலந்துகொள்ளவும் மக்கரோன்களை நிரப்பவும்: மாக்கரோன் பிஸ்கட்டுகள் முற்றிலும் குளிர்ந்தவுடன் காகிதத்தில் இருந்து அகற்றவும். தயார் செய்யப்பட்ட கிரீம் சீஸ் நிரப்புதலுடன் அவற்றை நிரப்பி குழந்தைகளுக்கு குடுத்து பாருங்க. உள்ளே போகும் நேரமே தெரியாது. குறிப்பு : ஒரே நிறங்களில் உள்ள மக்ரூன் - கிரீமையும் சேர்த்து பரிமாறலாம் அல்லது மூன்றையும் கலந்து ஒரே மக்ரூனாகவும் செய்யலாம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.