இடுப்பு வலி ஹிப் இம்பிங்மெண்ட் என்றழைக்கப்படும் இடுப்பு மூட்டு வலி, இடுப்பு எலும்புகளில் தொடர் வலியை ஏற்படுத்தி நிலைகுலையச் செய்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இடுப்பை சகஜமாக அசைக்க முடியாத சூழல் உருவாகிறது. இத்தகைய இடுப்பு மூட்டு வீக்க பிரச்சனையை உடலியல் சிகிச்சை, மருந்துகள் அல்லது சில நேரங்களில் அறுவை சிகிச்சை செய்து தான் சரி செய்ய முடியும். இடுப்பு தொடை எழும்பு வீக்கம் அல்லது ஃபெமோசிடாபுலர் இம்பிங்மெண்ட் என்பது உடல் அசைவின் போது தொடை எழும்புக்கும், இடுப்பு எழும்புக்கும் இடையே அசாதாரணமான தொடர்பை ஏற்படுத்தும் நிலையாகும். பெரும்பாலும் விளையாட்டு வீரர், வீராங்கணைகளுக்கு தோள்பட்டை தசை எழும்பில் இதுபோன்ற பிரச்சனை வருவதுண்டு. ஆனால் தற்போது அனைத்து வயதினரிடமும் இந்த பிரச்சனையை காண முடிகிறது. தொடக்கத்தில் தளர்ந்து இருக்கும் இந்த பிரச்சனை மெதுவாக நீண்ட காலத்தில் இடுப்பு, தொடை பகுதியில் மோசமான நிலையை உருவாக்க வாய்ப்பிருக்கிறது. இந்த பிரச்சனை ஒருவரது சராசரியான தினசரி தேவைகளை கூட செய்ய முடியாதவாறு வாட்டி வதைக்க வாய்ப்பிருக்கிறது. நமது அன்றாட தவறான வாழ்க்கை முறை இந்த பிரச்சனைக்கு வழிவகுக்கலாம். உதாரணமாக கால்பந்து போன்ற விளையாட்டுகளில் தொடர்ச்சியாக செய்யும் அசைவுகள் மூட்டின் கார்டிலேஜ் மேலான அழுத்தத்தை அதிகரிக்கலாம். அதுமட்டுமின்றி, உடல் அசைவேயில்லாமல் இருக்கும் பட்சத்தில் இடுப்பை சுற்றியுள்ள தசைகள் பலவீனமாகி இந்த பிரச்சனைக்கு ஓர் முக்கிய காரணியாக மாறலாம். இது பெரும்பாலும் 45 வயதுக்குட்பட்டவர்களில் ஆஸ்டோஆர்த்ரிட்டிஸ் எனப்படும் இடுப்பு கீழ்வாத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். நோய்க்கான காரணங்கள் இடுப்பு மூட்டு எழும்பு வீக்கம் ஒருவரின் உடல்நிலையை பாதித்து அசௌகரியத்தை உருவாக்குகிறது. இது ஃபெமரோல் அல்லது அசிடாபுலத்தின் ஒழுங்கற்ற வடிவமைப்பினால் உருவாகி, உடல் அசைவின் போது எலும்புகளிடையே மோசமான தொடர்புகளை ஏற்படுத்துகிறது. மரபணுக்கள், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் விளையாட்டுகள், இடுப்பு பகுதியில் தொடர்ச்சியான அசைவை கொடுக்கும் பட்சத்தில் இந்த பிரச்சனைக்கு வழி வகுக்கிறது. அதுமட்டுமின்றி, உடல்ரீதியான இந்த தசைகளின் சக்தி மற்றும் நெகிழ்வுத்தன்மையிலுள்ள பையோமெக்கானிக்கல் சமநிலைகள் இடுப்பு மூட்டின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, கட்டமைப்பு பிரச்சினைகளை அதிகப்படுத்தி இந்த நிலையை உருவாக்க காரணமாகிறது. நோயின் அறிகுறிகள் உடல் அசைவின் போது சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகப்படியான அழுத்தத்தை உண்டாக்குவது, குத்துவது போன்ற உணர்வு, குறிப்பாக தொடர்ச்சியான உடல் அசைவுகளின் மூலம் காலை குறுக்கிட்டு உட்கார முடியாத நிலை, காலை விரிக்க முடியாத நிலை, எந்த வேலை செய்தாலும் இடுப்பு பகுதியில் வலி, நடக்கும் போதும் வலி, தொடை இடுக்குகளில் வலி, கீழ் முதுகு தண்டில் வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மருத்துவரை தொடர்பு கொள்வது அவசியம். நோயை அடையாளம் காணுதல் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகிய பிறகு, இடுப்பு, மூட்டுகளின் வலியின் விரிவான தகவலை பெற எக்ஸ்-ரே, எம்ஆர்ஐ அல்லது சிடி ஸ்கேன் எடுத்து சோதனை செய்து பார்க்கலாம். அதன் பின்னரே நோயின் தன்மையை உறுதி செய்து மருத்துவர் சிகிச்சையை தொடங்குவார். Also Read | வைட்டமின் ஈ குறைபாடு இருக்கா..? அறிகுறிகளும்.. சாப்பிட வேண்டிய உணவுகளும்..! நோய்க்கான சிகிச்சை புனேவில் உள்ள ஹகாங்கீர் பல்துறை மருத்துவமனைகளில் ஆர்தோபிடிக் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணரும், மருத்துவருமான ஆஷிஷ் அர்பத் இதுபற்றி கூறியதாவது, இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் நபர், அதற்கான சிகிச்சையை நல்ல உடற்தகுதியுடன் தாங்கும் மனநிலை மற்றும் உடல்நிலையோடு இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நோயாளி தேவையான மருந்துகள் மற்றும் ஓய்வு எடுத்தல் அவசியம். உடல்நலனை மேம்படுத்த தேவையான உடல் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் இடுப்பு பகுதியில் வலி குறைந்து நேர்த்தியான அசைவையும், தாங்கி நிற்க தேவையான பலமும் அதிகரிக்க வாய்ப்புண்டு. மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில், இந்த வலியை நீக்கி உடல் அசைவு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஆர்த்ராஸ்கோப்பி சிகிச்சையை மேற்கொள்ளலாம். மேலும் இதுபற்றி அவர் கூறும் போது, இந்த அறுவை சிகிச்சையின் போது, அறுவை சிகிச்சை நிபுணர் எழும்புகளின் நகர்தல், லாப்ரல் கசிவு உள்ளிட்டவற்றை கட்டுக்குள் கொண்டு வந்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை துல்லியமாக கையாள வழிசெய்கிறது. மிகவும் குறுகிய பகுதியில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை, மற்ற பெரும்பாலான திறந்த அறுவை சிகிச்சைகளை ஒப்பிடும்போது குறைவான பின்விளைவுகள் மற்றும் விரைவான குணமடைதலை ஏற்படுத்துகிறது. மேலும் எளிதில் மீண்டு வர உதவியாகவும் இருக்கிறது. இத்தகைய இடுப்பு, மூட்டு பிரச்சனை மேலும் தீவரமடைவதற்கு முன்பாக திருத்தப்படுவதன் மூலம், மருத்துவரால் நோயாளியின் மூட்டு செயல்பாட்டை எளிதாக பாதுகாக்க முடியும். இந்த அறுவை சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது. இதில் குறைந்த அளவிலான இரத்த இழப்பே ஏற்படும். குறைவான பக்க விளைவுகள், மூட்டிற்கு எந்தவொரு அதிர்ச்சியையும் ஏற்படுத்தாது. இந்த அறுவை சிகிச்சை இடுப்பு மாற்றத்தை தாமதமாக்கவோ அல்லது தவிர்க்கவோ உதவலாம். ஒருவர் தனது வாழ்கையின் தரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த சிகிச்சை உதவுகிறது என்றார். None
Popular Tags:
Share This Post:
பாடி ஸ்பிரே அடிப்பதால் கழுத்து பகுதி கருப்பாக மாறுமா? உண்மை என்ன?
- by Sarkai Info
- August 27, 2024
திருநெல்வேலி - வைஷ்ணோ தேவி கத்ரா ரயில் டெல்லி செல்லாது... ரயில் தண்டவாளப் பணியால் நடவடிக்கை...
August 27, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- August 25, 2024
-
- August 25, 2024
-
- August 25, 2024
Featured News
Latest From This Week
புரட்டாசியில் கூட ஆட்டுக்கறி சாப்பிடலாம்... மட்டன் டேஸ்டில் ஒரு காய்கறி...
LIFESTYLE
- by Sarkai Info
- August 17, 2024
கயாவில் பித்ருக்கள் வழிபாடு... தென் மாவட்ட பயணிகளுக்காக நெல்லை - பாட்னா சிறப்பு ரயில்...
LIFESTYLE
- by Sarkai Info
- August 17, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.