வீட்டிற்குள் நுழைவது முதல் வெளியேறுவது வரை அனைத்தும் வாஸ்து படி இருந்தால் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். வீட்டின் அனைத்து இடங்களிலும் வாஸ்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல, வீட்டின் பெயர்ப்பலகை செய்யும் போதும் அதனை வைக்கும் போதும் வாஸ்துவை கவனித்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. பெயர்ப்பலகை நம் வீட்டின் அடையாளமாக இருக்கிறது. பெயர்ப்பலகையின் மூலம் மக்கள் நம்மை அறிந்து கொள்கிறார்கள். பெயர்ப்பலகையானது பிரதான கதவின் அழகை மேம்படுத்துவதுடன், நேர்மறை ஆற்றலையும் வீட்டிற்குள் கொண்டு வருகிறது. வாஸ்து படி பெயர்ப்பலகை எப்படி இருக்க வேண்டும், பெயர்ப்பலகை வைக்கும் போது எந்த விஷயங்களை மனதில் வைக்க வேண்டும் என்பதையும் இப்போது தெரிந்துகொள்ளலாம். பெயர் பலகை: பெயர்ப்பலகை எப்போதும் வீட்டின் பிரதான கதவின் இடது பக்கத்தில் வைக்கப்பட வேண்டும். நுழைவு வாயிலின் பாதி உயரத்திற்கு மேல் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும். இது வீட்டிற்கு மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டு வருவதோடு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது. பெயர்ப்பலகையின் வடிவம் வட்டமாகவோ, முக்கோணமாகவோ அல்லது ஐங்கோணமாகவோ இருக்க வேண்டும். பெயர்ப்பலகையை பொருத்தும் போது ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். அது எப்போதும் கீழே விழாத வகையில் பொருத்த வேண்டும். நிறம்: அதோடு பெயர்ப்பலகையின் நிறம் மிகவும் முக்கியமான ஒன்று. வீட்டின் திசைக்கு ஏற்ப பெயர் பலகையின் நிறத்தை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். வடக்கு நோக்கிய வீட்டில் சிவப்பு மற்றும் நீல நிற பெயர்ப்பலகைகளை பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக வெளிர் மஞ்சள் மற்றும் பச்சை நிற பெயர்ப்பலகைகளை தேர்வு செய்யலாம். வீடு கிழக்கு நோக்கி இருந்தாலும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தலாம். அதேபோல, தெற்குப் பார்த்த வீட்டிற்கு சிவப்பு நிறப் பெயர்ப் பலகையைப் பயன்படுத்துவது நல்லது. மேற்கு நோக்கிய வீட்டிற்கு, வெளிர் சாம்பல், கருப்பு, தங்க வெள்ளி அல்லது வெண்கலத்தில் எந்த நிறத்தின் பெயர்ப்பலகையையும் பயன்படுத்தலாம். வைக்கக்கூடாத பொருட்கள்: பெயர் பலகையின் முன் மின்னணு பொருட்களை வைக்கக்கூடாது. துப்புரவுப் பொருட்களையும் பெயர்ப் பலகையின் முன் வைக்கக் கூடாது. இது வாஸ்து படி அசுபமாக கருதப்படுகிறது. பெயர் பலகையில் விலங்குகள், பறவைகள், தெய்வங்கள் போன்றவற்றின் படங்கள் இடம்பெறக்கூடாது. பலகையில் எந்த விதமான ஓட்டையும் இருக்கக்கூடாது. ஏனெனில் இவை அனைத்தும் வாஸ்து படி சரியானதாக கருதப்படவில்லை. இந்த விஷயங்களில் சிறப்பு கவனம்: பெயர் பலகையில் அதிகபட்சம் இரண்டு வரிகளில் பெயரை எழுத வேண்டும். பெயர் பலகையின் நிறம், வீட்டின் அதிபதிகள் என்பதால், அந்த வீட்டில் உள்ளவரின் ராசிக்கு ஏற்ற நிறத்தினை தேர்வு செய்ய வேண்டும்.பெயர்ப்பலகையில் தூசி, அழுக்கு, சிலந்தி வலை போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெயர்ப் பலகையில் உள்ள எழுத்துக்களை எளிதில் படிக்கும் வகையில் இருக்க வேண்டும். இரண்டு பெயர் பலகைகள் ஒன்றாக இருக்கக்கூடாது. அதைப்போலவே, பெயர் பலகைக்கு பின்னால் பல்லிகள் அல்லது எந்த வகையான பூச்சிகளும் குடியேறக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெயர் பலகையில் கருப்பு எறும்புகள் ஊர்ந்து செல்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பெயர்ப்பலகை ஒன்று அல்லது இரண்டு அடி தூரத்தில் இருந்து கூட படிக்கும் அளவுக்கு பெரியதாக இருக்க வேண்டும். பிரதான வாயில் மற்றும் பெயர்ப்பலகை யாரையும் எளிதில் கவரும் வகையில் பிரகாசமாக இருக்க வேண்டும். None
Popular Tags:
Share This Post:

kutralanathar temple: குற்றாலநாதர் கோவில் திருவாதிரை திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகலத் துவக்கம்...
January 5, 2025
What’s New
Spotlight
Today’s Hot
பிறர் மீது நம்பிக்கை வைக்காத 5 ராசிக்காரர்கள்! இதில் நீங்களும் இதில் ஒருவரா?
- By Sarkai Info
- December 23, 2024
மனைவியை ராணி பாேல் பார்த்துக்கொள்ளும் 5 ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?
- By Sarkai Info
- December 21, 2024
Featured News
நன்றாக காதலிக்க தெரிந்த 5 ராசிகள்! எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா?
- By Sarkai Info
- December 20, 2024
Latest From This Week
மார்கழி மாத வெள்ளிக்கிழமையில் சொல்ல வேண்டிய ’காமாட்சி அம்மன் மந்திரம்’.. வழிபாட்டு முறைகள்.!
SPIRITUAL
- by Sarkai Info
- December 20, 2024
வீட்டில் சாமி கும்பிடும்போது இந்த 3 விஷயங்களை கடைபிடியுங்கள்... முழு பலனை பெறும் வழிபாடு..!
SPIRITUAL
- by Sarkai Info
- December 20, 2024
தேனி வழியாக சபரிமலை செல்லும் பக்கதர்கள் கவனத்திற்கு... புதிய ரூட் இதுதான்... காவல்துறை முக்கிய அறிவிப்பு
SPIRITUAL
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.