பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞர், தத்துவஞானியாகத் திகழ்ந்தவர் சாணக்கியர். அவருடைய அறிவுரைகள் எந்த காலத்திற்கும் உகந்ததாக அமைந்துள்ளது. அதனால் கிடைக்கும் பலன்களும் அளவிட இயலாதது. அவருடைய அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் உள்ளது. அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டிய பல கருத்துகளை சாணக்கிய நீதி கூறுகிறது. சாணக்கிய நீதி, அடிப்படையில் மனித வாழ்க்கையின் நடைமுறை விஷயங்களையும் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதை பற்றியும் சொல்லும். அந்த வகையில் ஆச்சார்யா சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு சில விதிகளை கூறியுள்ளார். அவற்றை பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம். சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளபடி, தனது வாழ்க்கைத் துணை சொன்னவுடன் செய்ய வேண்டிய முக்கியமான சில வேலைகள் உள்ளன. அவை என்ன என்பதை பார்க்கலாம். எதையும் இல்லை என்றும் வேண்டாம் என்றும் கூறக்கூடாது. சற்று யோசித்து நிதானமாக வேறு விதமாகத்தான் பதில் கூற வேண்டும். முடிந்தவரை அவர்கள் கேட்டதை செய்துவிடுவது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணை சற்று சோகமாக இருந்தால், அல்லது வருத்தமாக இருந்தால் அவரை சமாதானம் செய்ய முயற்சிக்க வேண்டும். பின்னர் அவரது மனதை அமைதிப்படுத்தி பிரச்சனையை சரி செய்ய வேண்டும். கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ மகிழ்ச்சி தரும் விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டும். செய்யும் ஒரு செயல் அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை செய்ய வேண்டாம் என சாணக்கிய நீதி கூறுகிறது. ஒருவரின் கோபமே முதல் எதிரியாக உள்ளது. கோபம் உறவைக் கெடுக்கிறது. ஒருவரின் திருமண வாழ்க்கையில், துணையிடம் கோபத்தை தவிர்த்து பொறுமையைக் கடைப்பிடித்தாலே பல பிரச்னைகள் தீர்ந்து விடும். சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படத் தொடங்கினால் வாழ்க்கை நரகம் ஆகிவிடும். குடும்பத்திலும், சமூகத்திலும் நம்மை அடையாளப்படுத்துவது நம்முடைய பேச்சுமுறையே. இனிமையான பேச்சு கொண்டவருக்கு குடும்ப உறவிலும், சமூகத்திலும் எப்போதும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சாணக்கியரால் சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ள இவற்றைக் கடைப்பிடித்தாலே நிச்சயமாக ஒருவருடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். None
Popular Tags:
Share This Post:

kutralanathar temple: குற்றாலநாதர் கோவில் திருவாதிரை திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகலத் துவக்கம்...
January 5, 2025
What’s New
Spotlight
Today’s Hot
பிறர் மீது நம்பிக்கை வைக்காத 5 ராசிக்காரர்கள்! இதில் நீங்களும் இதில் ஒருவரா?
- By Sarkai Info
- December 23, 2024
மனைவியை ராணி பாேல் பார்த்துக்கொள்ளும் 5 ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?
- By Sarkai Info
- December 21, 2024
Featured News
நன்றாக காதலிக்க தெரிந்த 5 ராசிகள்! எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா?
- By Sarkai Info
- December 20, 2024
Latest From This Week
மார்கழி மாத வெள்ளிக்கிழமையில் சொல்ல வேண்டிய ’காமாட்சி அம்மன் மந்திரம்’.. வழிபாட்டு முறைகள்.!
SPIRITUAL
- by Sarkai Info
- December 20, 2024
வீட்டில் சாமி கும்பிடும்போது இந்த 3 விஷயங்களை கடைபிடியுங்கள்... முழு பலனை பெறும் வழிபாடு..!
SPIRITUAL
- by Sarkai Info
- December 20, 2024
தேனி வழியாக சபரிமலை செல்லும் பக்கதர்கள் கவனத்திற்கு... புதிய ரூட் இதுதான்... காவல்துறை முக்கிய அறிவிப்பு
SPIRITUAL
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.