TAMIL-NADU

பேரிடர் காலத்தில் கடன் உதவி... வணிகர்களே ரிசர்வ் வங்கியின் இந்த திட்டம் பற்றித் தெரியுமா...

பேரிடர் காலத்தில் கடன் உதவி... வணிகர்களே ரிசர்வ் வங்கியின் இந்த திட்டம் பற்றித் தெரியுமா.. வாழ்வாதாரத்திற்காகக் கடன் வாங்குபவர்களின் கடனைத் திரும்பச் செலுத்தும் திறனைக் காலநிலை மாற்றம் பாதிக்கிறது. அதாவது அதிக மழையினால் ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம், சுனாமி போன்றவை. இவ்வாறு இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்படும் பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி உங்களுக்கும் உதவிட முன்வந்துள்ளது. உங்களுடைய மாநிலம் / மாவட்டத்தில் பேரிடர் பாதித்திருக்கும் பகுதிகள் பற்றி மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கை செய்கின்றன. மாநில அளவிலான வங்கியாளர் குழுகள் (SLBC) அல்லது மாவட்ட ஆலோசனைக் குழு (DCC) நிவாரண நடவடிக்கைகளை அறிவிப்பதற்கான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறது. வேளாண்மை அதனுடன் இணைந்த செயல்பாடுகள், ஊரகக் கைவினைஞர்கள், வணிகர்கள், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த கடன் பெற்றவர்களுக்கு நிவாரண அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. இதையும் படிங்க: இருப்பவர்கள் வைக்கட்டும்; இல்லாதவர்கள் எடுத்துக்கட்டும்… குமரி இளைஞர்களின் புது முயற்சி… உங்களுடைய வருவாய் ஆதாரம் இயற்கைப் பேரிடரால் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தால் நீங்கள் நிதி நிறுவனங்களை (வங்கி / வங்கியல்லாத நிதி நிறுவனம் / கூட்டுறவு வங்கிகள்) அணுகி நிவாரணம் கோரலாம். நடப்பில் உள்ள உங்களின் கடனை மறுசீரமைத்துக் கொள்வதற்கோ அல்லது புதிதாகக் கடன் பெறுவதற்கோ நீங்கள் கோரிக்கை வைக்கலாம். காலம் தாழ்த்திக் கடனைச் செலுத்துவதற்கான வசதி, கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான கால அளவு அதிகரிப்பு, தளர்த்தப்பட்ட நியமங்கள், வட்டித் தள்ளுபடி ஆதாயங்கள் போன்ற பொருத்தமான வகைகளில் நீங்கள் பெற்றிருக்கும் கடன்கள் மறுசீரமைக்கப்படும். பேரிடர் மறுபடியும் நேர்ந்தால் என்ன செய்வது என்று நீங்கள் வினவக் கூடும். கவலைப்பட வேண்டாம். அடுத்தடுத்து நிகழக்கூடிய பேரிடர்களுக்கும் இத்தகைய நிவாரணங்கள் பொருந்தக்கூடியவையே. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / பேரிடர் காலத்தில் கடன் உதவி... வணிகர்களே ரிசர்வ் வங்கியின் இந்த திட்டம் பற்றித் தெரியுமா... பேரிடர் காலத்தில் கடன் உதவி... வணிகர்களே ரிசர்வ் வங்கியின் இந்த திட்டம் பற்றித் தெரியுமா... பேரிடர் காலத்தில் கடன் உதவி... வணிகர்களே ரிசர்வ் வங்கியின் இந்த திட்டம் பற்றித் தெரியுமா.. பேரிடரால் தொழில் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க உதவும் வகையில் வங்கிகளில் கடன் உதவி வழங்கப்படுகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 16, 2024, 5:02 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Santhana Priya தொடர்புடைய செய்திகள் வாழ்வாதாரத்திற்காகக் கடன் வாங்குபவர்களின் கடனைத் திரும்பச் செலுத்தும் திறனைக் காலநிலை மாற்றம் பாதிக்கிறது. அதாவது அதிக மழையினால் ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம், சுனாமி போன்றவை. இவ்வாறு இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்படும் பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி உங்களுக்கும் உதவிட முன்வந்துள்ளது. உங்களுடைய மாநிலம் / மாவட்டத்தில் பேரிடர் பாதித்திருக்கும் பகுதிகள் பற்றி மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கை செய்கின்றன. மாநில அளவிலான வங்கியாளர் குழுகள் (SLBC) அல்லது மாவட்ட ஆலோசனைக் குழு (DCC) நிவாரண நடவடிக்கைகளை அறிவிப்பதற்கான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறது. வேளாண்மை அதனுடன் இணைந்த செயல்பாடுகள், ஊரகக் கைவினைஞர்கள், வணிகர்கள், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த கடன் பெற்றவர்களுக்கு நிவாரண அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. விளம்பரம் இதையும் படிங்க: இருப்பவர்கள் வைக்கட்டும்; இல்லாதவர்கள் எடுத்துக்கட்டும்… குமரி இளைஞர்களின் புது முயற்சி… உங்களுடைய வருவாய் ஆதாரம் இயற்கைப் பேரிடரால் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தால் நீங்கள் நிதி நிறுவனங்களை (வங்கி / வங்கியல்லாத நிதி நிறுவனம் / கூட்டுறவு வங்கிகள்) அணுகி நிவாரணம் கோரலாம். நடப்பில் உள்ள உங்களின் கடனை மறுசீரமைத்துக் கொள்வதற்கோ அல்லது புதிதாகக் கடன் பெறுவதற்கோ நீங்கள் கோரிக்கை வைக்கலாம். காலம் தாழ்த்திக் கடனைச் செலுத்துவதற்கான வசதி, கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான கால அளவு அதிகரிப்பு, தளர்த்தப்பட்ட நியமங்கள், வட்டித் தள்ளுபடி ஆதாயங்கள் போன்ற பொருத்தமான வகைகளில் நீங்கள் பெற்றிருக்கும் கடன்கள் மறுசீரமைக்கப்படும். விளம்பரம் பேரிடர் மறுபடியும் நேர்ந்தால் என்ன செய்வது என்று நீங்கள் வினவக் கூடும். கவலைப்பட வேண்டாம். அடுத்தடுத்து நிகழக்கூடிய பேரிடர்களுக்கும் இத்தகைய நிவாரணங்கள் பொருந்தக்கூடியவையே. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Bank Loan , Bussiness Man , Disasters , Local News , Reserve Bank of India , Tamil Nadu First Published : October 16, 2024, 5:02 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.