TAMIL-NADU

ரயில் சேவையில் கடைசி நேர மாற்றம்... ஆவடி ரெயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள்... நள்ளிரவில் பரபரப்பு

சென்ட்ரல் ரயில் முனையத்திற்கு பதிலாக ஆவடியில் இருந்து சில விரைவு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரயில்கள் வந்துசேர தாமதம் ஆனதால் ஆயிரக்கணக்கான பயணிகள் நள்ளிரவில் காத்திருந்து அவதியடைந்தனர். கனமழை காரணமாக சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் சென்ட்ரல் ரயில் முனையத்தில் இருந்து புறப்பட வேண்டிய பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பல ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பயணிகளின் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட நிலையில், பயணிகள் ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்தனர். நடைமேடைகள், நடைமேம்பாலத்தில் என சுமார் 4ஆயிரத்து 500 பேர் கூடியதால் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் குறித்த நேரத்தில் விரைவு ரயில்கள் வந்து சேராததாலும், ரயிலின் நிலை குறித்து அறிவிப்பு தெரிவிக்காததாலும் செய்வதறியாது மக்கள் அவதியடைந்தனர். கூடுதல் கட்டணம் செலுத்தி வாடகை வாகனங்கள் ஆவடி ரயில் நிலையம் வந்து சேர்ந்தும், உரிய நேரத்தில் ரயில் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். பின்னர் 12 மணியளவில் 3 விரைவு ரயில்கள் ஆவடியில் இருந்து புறப்பட்ட நிலையில், மேலும் 3 ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / ரயில் சேவையில் கடைசி நேர மாற்றம்... ஆவடி ரெயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள்... நள்ளிரவில் பரபரப்பு ரயில் சேவையில் கடைசி நேர மாற்றம்... ஆவடி ரெயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள்... நள்ளிரவில் பரபரப்பு சென்ட்ரல் ரயில் முனையத்தில் இருந்து புறப்பட வேண்டிய பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பல ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 16, 2024, 5:32 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Lakshmanan G தொடர்புடைய செய்திகள் சென்ட்ரல் ரயில் முனையத்திற்கு பதிலாக ஆவடியில் இருந்து சில விரைவு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரயில்கள் வந்துசேர தாமதம் ஆனதால் ஆயிரக்கணக்கான பயணிகள் நள்ளிரவில் காத்திருந்து அவதியடைந்தனர். கனமழை காரணமாக சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் சென்ட்ரல் ரயில் முனையத்தில் இருந்து புறப்பட வேண்டிய பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பல ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. விளம்பரம் இதுதொடர்பாக பயணிகளின் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட நிலையில், பயணிகள் ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்தனர். நடைமேடைகள், நடைமேம்பாலத்தில் என சுமார் 4ஆயிரத்து 500 பேர் கூடியதால் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் குறித்த நேரத்தில் விரைவு ரயில்கள் வந்து சேராததாலும், ரயிலின் நிலை குறித்து அறிவிப்பு தெரிவிக்காததாலும் செய்வதறியாது மக்கள் அவதியடைந்தனர். கூடுதல் கட்டணம் செலுத்தி வாடகை வாகனங்கள் ஆவடி ரயில் நிலையம் வந்து சேர்ந்தும், உரிய நேரத்தில் ரயில் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். பின்னர் 12 மணியளவில் 3 விரைவு ரயில்கள் ஆவடியில் இருந்து புறப்பட்ட நிலையில், மேலும் 3 ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Avadi , Chennai Central S22p04 , Latest News , Passengers , Train First Published : October 16, 2024, 5:31 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.