TAMIL-NADU

Chennai Rain: சென்னையில் நாளை மழை எப்படி இருக்கும்?... வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலெர்ட் விடுக்கப்படுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் வானிலை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வாளர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “இந்த காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழையானது இயல்பைவிட 94 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழகம், புதுவைக்கும் - நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கக்கூடும். இதன்காரணமாக, அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கடலில் தான் இருக்கிறது. இன்னும் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வருகிறது. நாளை காலை கரைக்கு அருகில் வரும்போது மழை பெய்ய வாய்ப்பு இருக்கக்கூடிய காரணத்தைக் கருத்தில் கொண்டு, ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. Also Read | Chennai Rain: சென்னையை நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. எங்கு கரையை கடக்கிறது? ரெட் அலெர்ட் என்பதற்கு எல்லா இடங்களிலும் 20 செ.மீ மழை பெய்யும் என்பதில் அர்த்தமில்லை. கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மழைக்கு மட்டுமல்ல, அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து தான் ரெட் அலர்ட் போன்றவை விடுக்கப்படுகிறது” என்று விரிவாக கூறினார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / Chennai Rain: சென்னையில் நாளை மழை எப்படி இருக்கும்?... வானிலை ஆய்வு மையம் விளக்கம்! Chennai Rain: சென்னையில் நாளை மழை எப்படி இருக்கும்?... வானிலை ஆய்வு மையம் விளக்கம்! ரெட் அலெர்ட் என்பதற்கு எல்லா இடங்களிலும் 20 செ.மீ மழை பெய்யும் என்பதில் அர்த்தமில்லை. கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : October 16, 2024, 4:09 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Malaiarasu M தொடர்புடைய செய்திகள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலெர்ட் விடுக்கப்படுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் வானிலை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வாளர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “இந்த காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழையானது இயல்பைவிட 94 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழகம், புதுவைக்கும் - நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கக்கூடும். விளம்பரம் இதன்காரணமாக, அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கடலில் தான் இருக்கிறது. இன்னும் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வருகிறது. நாளை காலை கரைக்கு அருகில் வரும்போது மழை பெய்ய வாய்ப்பு இருக்கக்கூடிய காரணத்தைக் கருத்தில் கொண்டு, ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. Also Read | Chennai Rain: சென்னையை நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. எங்கு கரையை கடக்கிறது? ரெட் அலெர்ட் என்பதற்கு எல்லா இடங்களிலும் 20 செ.மீ மழை பெய்யும் என்பதில் அர்த்தமில்லை. கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மழைக்கு மட்டுமல்ல, அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து தான் ரெட் அலர்ட் போன்றவை விடுக்கப்படுகிறது” என்று விரிவாக கூறினார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai Rain , chennai rains , Latest News , Red Alert , Tamilnadu , Weather Update First Published : October 16, 2024, 4:08 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.