TAMIL-NADU

ரெட் அலர்ட் விடுத்தும் சென்னையில் மழை பெய்யாதது ஏன்? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இதனால், தமிழ்நாட்டின் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அதி கன மழை இருக்கும் என ரெட் அலர்ட் விடப்பட்டது. பிறகு காற்று அழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி தற்போது தென் ஆந்திராவில் மிக கன மழை பெய்துவருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த 14 மற்றும் 15ம் தேதி கன முதல் மிக கன மழை பெய்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் நேற்று (15ம் தேதி) காலை முதலே மிக கன மழை பெய்தது. இந்த மாவட்டங்களில் சில இடங்களில் அதி கன மழையும் பெய்துள்ளது. இந்த மிக கன மழையின் காரணமாக தமிழ்நாடு அரசு, நிவாரண முகாம்கள், தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், வங்கக்கடலில் இருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் தரையை நோக்கி நகர்ந்து வருவதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாகவும் விளக்கமளித்தார். இதையும் படியுங்கள் : கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? - முழு விவரம்! ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் அனைத்து இடங்களிலும் 20 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று அர்த்தம் இல்லை என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / ரெட் அலர்ட் விடுத்தும் சென்னையில் மழை பெய்யாதது ஏன்? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்! ரெட் அலர்ட் விடுத்தும் சென்னையில் மழை பெய்யாதது ஏன்? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்! சென்னையில் கனமழை இல்லாத சூழலில், ஏன் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது என்ற காரணத்தை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கியுள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 16, 2024, 9:18 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இதனால், தமிழ்நாட்டின் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அதி கன மழை இருக்கும் என ரெட் அலர்ட் விடப்பட்டது. பிறகு காற்று அழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி தற்போது தென் ஆந்திராவில் மிக கன மழை பெய்துவருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த 14 மற்றும் 15ம் தேதி கன முதல் மிக கன மழை பெய்தது. விளம்பரம் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் நேற்று (15ம் தேதி) காலை முதலே மிக கன மழை பெய்தது. இந்த மாவட்டங்களில் சில இடங்களில் அதி கன மழையும் பெய்துள்ளது. இந்த மிக கன மழையின் காரணமாக தமிழ்நாடு அரசு, நிவாரண முகாம்கள், தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், வங்கக்கடலில் இருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் தரையை நோக்கி நகர்ந்து வருவதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாகவும் விளக்கமளித்தார். விளம்பரம் இதையும் படியுங்கள் : கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? - முழு விவரம்! ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் அனைத்து இடங்களிலும் 20 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று அர்த்தம் இல்லை என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai Rain , Latest News First Published : October 16, 2024, 9:18 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.