TAMIL-NADU

மத போதகரை தாக்கிய புகார்; முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு!

அதிமுக ஆட்சி காலகட்டத்தில் அமைச்சர்களாக இருந்தவர் எஸ்.பி.வேலுமணியும், கடம்பூர் ராஜுவும். இவர்கள் மீது தூத்துக்குடி முத்தையாபுரம் காவல்துறையினர் கிறிஸ்துவ மதபோதகர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துவ மத போதகர் ஜெகன். இவர், கடந்த சில காலத்திற்கு முன்பாக தனது பணி நிமித்தமாக முத்தையாபுரம் சாலையில் தனது காரில் சென்றிருக்கிறார். அப்போது எஸ்.பி.வேலுமணியும், கடம்பூர் ராஜுவும் திருச்செந்தூரில் இருந்து முத்தையாபுரம் சாலையில் கோவில்பட்டி நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். இந்நிலையில், மத போதகர் ஜெகனின் கார், முத்தையாபுரம் ஓடை அருகே எஸ்.பி.வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜு சென்ற கார் மீது மோதியதாக சொல்லப்படுகிறது. இதில், ஜெகனுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் சேர்ந்து ஜெகனை தாக்கியதாக சொல்லப்படுகிறது. அந்த அடிப்படையில் அவர் முத்தையாபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரை எடுத்த காவல்துறையினர் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / மத போதகரை தாக்கிய புகார்; முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு! மத போதகரை தாக்கிய புகார்; முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு! அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜு ஆகிய இருவர் மீதும் மதபோதகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 16, 2024, 4:43 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் அதிமுக ஆட்சி காலகட்டத்தில் அமைச்சர்களாக இருந்தவர் எஸ்.பி.வேலுமணியும், கடம்பூர் ராஜுவும். இவர்கள் மீது தூத்துக்குடி முத்தையாபுரம் காவல்துறையினர் கிறிஸ்துவ மதபோதகர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துவ மத போதகர் ஜெகன். இவர், கடந்த சில காலத்திற்கு முன்பாக தனது பணி நிமித்தமாக முத்தையாபுரம் சாலையில் தனது காரில் சென்றிருக்கிறார். அப்போது எஸ்.பி.வேலுமணியும், கடம்பூர் ராஜுவும் திருச்செந்தூரில் இருந்து முத்தையாபுரம் சாலையில் கோவில்பட்டி நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். விளம்பரம் இதையும் படிங்க : ரெட் அலெர்ட் எதிரொலி : 4 மாவட்டங்களில் எவையெல்லாம் இயங்கும்? எதற்கெல்லாம் விடுமுறை? முழு விபரம் இதோ இந்நிலையில், மத போதகர் ஜெகனின் கார், முத்தையாபுரம் ஓடை அருகே எஸ்.பி.வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜு சென்ற கார் மீது மோதியதாக சொல்லப்படுகிறது. இதில், ஜெகனுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் சேர்ந்து ஜெகனை தாக்கியதாக சொல்லப்படுகிறது. அந்த அடிப்படையில் அவர் முத்தையாபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். விளம்பரம் அந்தப் புகாரை எடுத்த காவல்துறையினர் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: kadambur raju , Latest News , SP Velumani First Published : October 16, 2024, 4:43 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.