TAMIL-NADU

கனமழை பெய்தும் சென்னையில் மழைநீர் வடிந்தது எப்படி? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

Minister KN Nehru மழைநீர் வடிகால் காரணமாகவே 4 மணி நேரத்தில் வெள்ள நீர் வடிந்ததாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் 785 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், 37 கோடி ரூபாய் செலவில் 41 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மழைநீர் வடிகால் பணிகள் முடிந்ததால் தான் தண்ணீர் வடிந்ததாக குறிப்பிட்டார். “நேற்று ஒரே நாளில் 17 - 20 செ.மீ வரை மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்கள் 30 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்ட காரணத்தால்தான் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. சென்னையில் ஒருசில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதிமுக ஆட்சியில் சுமார் 400 கி.மீ மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. தற்போது 782 கி.மீ தூர வடிகால்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதனால் தான் உடனடியாக மழைநீர் வடிந்துள்ளது. புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதிகாரிகளுக்கு என்னென்ன பணிகள் என்பதை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உத்தரவிட்டிருந்தனர். சென்னையில் கால் படாத இடங்களே இல்லை என்ற அளவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கடந்த காலங்களில் வெள்ளச்சேரியாக இருந்த வேளச்சேரியில் இம்முறை எந்த பாதிப்பும் இல்லை. வேளச்சேரி மக்கள் இன்று காலையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டுகின்றனர். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / கனமழை பெய்தும் சென்னையில் மழைநீர் வடிந்தது எப்படி? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! கனமழை பெய்தும் சென்னையில் மழைநீர் வடிந்தது எப்படி? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Minister KN Nehru சென்னையில் இரவில் இருந்த மழை நீர் காலையில் வடிந்துவிட்டதால் மிகவும் சங்கடப்பட்டு வெள்ளை அறிக்கை வேண்டும் எனக் கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் கே.என்.நேரு படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Chennai,Tamil Nadu Last Updated : October 16, 2024, 9:19 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P தொடர்புடைய செய்திகள் மழைநீர் வடிகால் காரணமாகவே 4 மணி நேரத்தில் வெள்ள நீர் வடிந்ததாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் 785 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், 37 கோடி ரூபாய் செலவில் 41 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மழைநீர் வடிகால் பணிகள் முடிந்ததால் தான் தண்ணீர் வடிந்ததாக குறிப்பிட்டார். “நேற்று ஒரே நாளில் 17 - 20 செ.மீ வரை மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்கள் 30 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்ட காரணத்தால்தான் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. சென்னையில் ஒருசில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. விளம்பரம் அதிமுக ஆட்சியில் சுமார் 400 கி.மீ மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. தற்போது 782 கி.மீ தூர வடிகால்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதனால் தான் உடனடியாக மழைநீர் வடிந்துள்ளது. புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதையும் படிங்க: Power Cut : நாளை (17.10.2024) முக்கிய இடங்களில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க! அதிகாரிகளுக்கு என்னென்ன பணிகள் என்பதை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உத்தரவிட்டிருந்தனர். சென்னையில் கால் படாத இடங்களே இல்லை என்ற அளவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கடந்த காலங்களில் வெள்ளச்சேரியாக இருந்த வேளச்சேரியில் இம்முறை எந்த பாதிப்பும் இல்லை. வேளச்சேரி மக்கள் இன்று காலையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டுகின்றனர். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai Rain , Latest News , Tamilnadu , Weather News in Tamil First Published : October 16, 2024, 9:19 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.