TAMIL-NADU

திருவண்ணாமலையில் கிரிவலம் போறிங்களா? பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் புதன்கிழமை அன்று பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திருவண்ணாமலைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரித்துள்ளது. புரட்டாசி மாத பௌர்ணமி புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 5.38 மணிக்கு நிறைவடைகிறது. வழக்கமாக பௌர்ணமி தினத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம். இதையும் படிக்க: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது, எங்கே கரையை கடக்கும்? - வானிலை ஆய்வாளர் கொடுத்த பதில் ஆனால், திருவண்ணாமலைக்கும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், இந்த முறை பக்தர்கள் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதுகாப்பு கருதி, வெளி மாவட்ட பக்தர்கள் திருவண்ணாமலை வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / திருவண்ணாமலையில் கிரிவலம் போறிங்களா? பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த ஆட்சியர் திருவண்ணாமலையில் கிரிவலம் போறிங்களா? பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த ஆட்சியர் புரட்டாசி மாத பவுர்ணமி புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 5.38 மணிக்கு நிறைவடைகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tiruvannamalai,Tamil Nadu Last Updated : October 16, 2024, 1:56 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் புதன்கிழமை அன்று பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திருவண்ணாமலைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரித்துள்ளது. புரட்டாசி மாத பௌர்ணமி புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 5.38 மணிக்கு நிறைவடைகிறது. வழக்கமாக பௌர்ணமி தினத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம். விளம்பரம் இதையும் படிக்க: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது, எங்கே கரையை கடக்கும்? - வானிலை ஆய்வாளர் கொடுத்த பதில் ஆனால், திருவண்ணாமலைக்கும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், இந்த முறை பக்தர்கள் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதுகாப்பு கருதி, வெளி மாவட்ட பக்தர்கள் திருவண்ணாமலை வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Tiruvannamalai First Published : October 16, 2024, 1:55 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.