TAMIL-NADU

சென்னைக்கு பெய்ய வேண்டிய மழை எங்கே? நேற்று இரவு என்ன நடந்தது?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு திசையில் நகர்ந்ததால், சென்னையில் இன்று எதிர்ப்பார்த்த அளவு மழை பெய்யவில்லை என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் நேற்று மற்றும் இன்று என இரு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் எதிர்ப்பார்த்த அளவு இல்லாமல், நேற்று இரவு சென்னையில் சாரல் மழை மட்டுமே பெய்தது. இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக நேர்காணல் அளித்த தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த், இதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். இதையும் படிக்க: சென்னையில் ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்படலாம் - தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் நியூஸ்18க்கு பிரத்யேக பேட்டி இதுகுறித்து அவர் கூறும்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடமேற்கு திசையில் இல்லாமல் வடக்கு திசையில் நகர்ந்ததால், மேக குவியல்கள் சுமார் 50 - 75 கி.மீ நகர்ந்துள்ளது. இதனால் சென்னையில் பெய்ய வேண்டிய மழை, தெற்கு ஆந்திரா, தென் கர்நாடகா ஆகிய பகுதிகளில் பெய்துள்ளது என தெரிவித்தார். மேலும் நேற்றைபோல இன்று சென்னையில் மழை இருக்காது என்றும், இருந்தாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தினார். மேலும் சென்னைக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படலாம் என கணித்துள்ளார். இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / சென்னைக்கு பெய்ய வேண்டிய மழை எங்கே? நேற்று இரவு என்ன நடந்தது? சென்னைக்கு பெய்ய வேண்டிய மழை எங்கே? நேற்று இரவு என்ன நடந்தது? நேற்றைபோல இன்று சென்னையில் மழை இருக்காது என்றும், இருந்தாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தினார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 16, 2024, 9:40 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு திசையில் நகர்ந்ததால், சென்னையில் இன்று எதிர்ப்பார்த்த அளவு மழை பெய்யவில்லை என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் நேற்று மற்றும் இன்று என இரு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. விளம்பரம் ஆனால் எதிர்ப்பார்த்த அளவு இல்லாமல், நேற்று இரவு சென்னையில் சாரல் மழை மட்டுமே பெய்தது. இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக நேர்காணல் அளித்த தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த், இதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். இதையும் படிக்க: சென்னையில் ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்படலாம் - தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் நியூஸ்18க்கு பிரத்யேக பேட்டி இதுகுறித்து அவர் கூறும்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடமேற்கு திசையில் இல்லாமல் வடக்கு திசையில் நகர்ந்ததால், மேக குவியல்கள் சுமார் 50 - 75 கி.மீ நகர்ந்துள்ளது. இதனால் சென்னையில் பெய்ய வேண்டிய மழை, தெற்கு ஆந்திரா, தென் கர்நாடகா ஆகிய பகுதிகளில் பெய்துள்ளது என தெரிவித்தார். விளம்பரம் மேலும் நேற்றைபோல இன்று சென்னையில் மழை இருக்காது என்றும், இருந்தாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தினார். மேலும் சென்னைக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படலாம் என கணித்துள்ளார். இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Weather News in Tamil , Weather Update First Published : October 16, 2024, 9:40 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.