TAMIL-NADU

சென்னையில் ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்படலாம் - தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் நியூஸ்18க்கு பிரத்யேக பேட்டி

சென்னையில் அதிக கனமழைக்கான ரெட் அலெர்ட் திரும்பப் பெறப்படலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் நேற்று மற்றும் இன்று என இரு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் ஒரு சில இடங்களில் அதிக கனமழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு இல்லாமல், நேற்று இரவு சென்னையில் சாரல் மழை மட்டுமே பெய்தது. இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக நேர்காணல் அளித்த தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த், சென்னையில் நேற்று இருந்த அளவிற்கு இன்று கனமழை இருக்காது என தெரிவித்தார். இதையும் படிக்க: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது, எங்கே கரையை கடக்கும்? - வானிலை ஆய்வாளர் கொடுத்த பதில் தொடர்ந்து பேசிய அவர், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட திசையில் நகர்ந்ததால், சென்னையில் பெய்யவேண்டிய மழை தென்கர்நாடகா, தெற்கு ஆந்திரா ஆகிய இடங்களில் பெய்யக்கூடும் என்றும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கரையை கடக்கும் வரை சென்னையில் கனமழை இருக்கும் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட், கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையாக மாற்றப்படலாம் என கூறியுள்ளார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / சென்னையில் ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்படலாம் - தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் நியூஸ்18க்கு பிரத்யேக பேட்டி சென்னையில் ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்படலாம் - தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் நியூஸ்18க்கு பிரத்யேக பேட்டி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கரையை கடக்கும் வரை சென்னையில் கனமழை இருக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஸ்ரீகாந்த் வலியுறுத்தல். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 16, 2024, 8:46 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் சென்னையில் அதிக கனமழைக்கான ரெட் அலெர்ட் திரும்பப் பெறப்படலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் நேற்று மற்றும் இன்று என இரு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் ஒரு சில இடங்களில் அதிக கனமழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டது. விளம்பரம் ஆனால் எதிர்பார்த்த அளவு இல்லாமல், நேற்று இரவு சென்னையில் சாரல் மழை மட்டுமே பெய்தது. இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக நேர்காணல் அளித்த தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த், சென்னையில் நேற்று இருந்த அளவிற்கு இன்று கனமழை இருக்காது என தெரிவித்தார். இதையும் படிக்க: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது, எங்கே கரையை கடக்கும்? - வானிலை ஆய்வாளர் கொடுத்த பதில் தொடர்ந்து பேசிய அவர், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட திசையில் நகர்ந்ததால், சென்னையில் பெய்யவேண்டிய மழை தென்கர்நாடகா, தெற்கு ஆந்திரா ஆகிய இடங்களில் பெய்யக்கூடும் என்றும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கரையை கடக்கும் வரை சென்னையில் கனமழை இருக்கும் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். விளம்பரம் மேலும் சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட், கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையாக மாற்றப்படலாம் என கூறியுள்ளார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Weather News in Tamil , Weather Update First Published : October 16, 2024, 8:37 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.