TAMIL-NADU

320 கி.மீ தூரத்தில் சென்னைக்கு புது ஆபத்து - வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரித்திருந்தது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை சென்னை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சென்னையில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை கடந்து செல்ல உள்ளதால், காற்றுகுவிப்பும் சென்னைக்கு வடக்கே நகர்வதன் காரணமாக சென்னை ஆபத்தில் இருந்து தப்பி உள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னையில் வரும் 20 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். Also Read : அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு சென்னையில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் மழையின் குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது எங்கு நிலை கொண்டுள்ளது என்று புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை முழுவதுமாக நீங்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 360 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. நாளை அதிகாலை வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா இடையே சென்னைக்கு அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.