TAMIL-NADU

மூத்த வழக்கறிஞர் வில்சன் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு - நீக்கம் செய்த மதுரை உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் டிஎன்பிஎஸ்சி தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் மூத்த வழக்கறிஞர் வில்சன் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தொடர்பான வழக்கு ஒன்றில், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுமாறு மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியிருந்தார். வில்சனின் கருத்து, அவமதிக்கும் வகையில் உள்ளதாக பதிவு செய்த நீதிமன்றம், வில்சனின் செயல்பாடுகுறித்து நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அதிருப்தி தெரிவித்து, வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்திருந்தது. இதையும் படிக்க: சென்னைக்கு பெய்ய வேண்டிய மழை எங்கே? நேற்று இரவு என்ன நடந்தது? இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, மூத்த வழக்கறிஞரிடம் நீதிபதி கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 26ஆம் தேதி நடந்த வழக்கு தொடர்பாக விவாதங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் இருந்து அதை நீக்க வேண்டும் எனவும் நீதிமன்ற விவாதங்களை பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முறையிடப்பட்டது. அதேபோல மூத்த வழக்கறிஞர் வில்சன் மீது பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்நிலையில், வீடியோவை பரவவிட்டவர் கைது செய்யப்படுவார் எனவும் வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மூத்த வழக்கறிஞர் வில்சன் தொடர்பாக, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நீக்கம் செய்யப்படுவதாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் வில்சன் நீதித்துறைக்காகவும், நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் எனவும் நீதிபதிகள் புகழாரம் சூட்டினர். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / மூத்த வழக்கறிஞர் வில்சன் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு - நீக்கம் செய்த மதுரை உயர்நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் வில்சன் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு - நீக்கம் செய்த மதுரை உயர்நீதிமன்றம் வில்சனின் செயல்பாடுகுறித்து நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அதிருப்தி தெரிவித்து, வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்திருந்தது. படிக்கவும் … 1-MIN READ Tamil Madurai,Tamil Nadu Last Updated : October 16, 2024, 12:18 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் டிஎன்பிஎஸ்சி தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் மூத்த வழக்கறிஞர் வில்சன் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தொடர்பான வழக்கு ஒன்றில், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுமாறு மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியிருந்தார். வில்சனின் கருத்து, அவமதிக்கும் வகையில் உள்ளதாக பதிவு செய்த நீதிமன்றம், வில்சனின் செயல்பாடுகுறித்து நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அதிருப்தி தெரிவித்து, வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்திருந்தது. இதையும் படிக்க: சென்னைக்கு பெய்ய வேண்டிய மழை எங்கே? நேற்று இரவு என்ன நடந்தது? விளம்பரம் இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, மூத்த வழக்கறிஞரிடம் நீதிபதி கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 26ஆம் தேதி நடந்த வழக்கு தொடர்பாக விவாதங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விளம்பரம் கொழுப்பு கல்லீரலுக்கான கிரீன் டீ, காபி மற்றும் பீட்ரூட் சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்.! மேலும் செய்திகள்… சமூக ஊடகங்களில் இருந்து அதை நீக்க வேண்டும் எனவும் நீதிமன்ற விவாதங்களை பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முறையிடப்பட்டது. அதேபோல மூத்த வழக்கறிஞர் வில்சன் மீது பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்நிலையில், வீடியோவை பரவவிட்டவர் கைது செய்யப்படுவார் எனவும் வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மூத்த வழக்கறிஞர் வில்சன் தொடர்பாக, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நீக்கம் செய்யப்படுவதாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையை நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. எங்கு கரையை கடக்கிறது? மூத்த வழக்கறிஞர் வில்சன் நீதித்துறைக்காகவும், நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் எனவும் நீதிபதிகள் புகழாரம் சூட்டினர். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: DMK MP Wilson , Madurai , Madurai High Court First Published : October 16, 2024, 12:18 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.