TAMIL-NADU

NTK | அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்... பரபரப்பு குற்றச்சாட்டு... விழுப்புரம் நாதகவில் என்ன பிரச்சனை?

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி பொறுப்பாளர் மணிகண்டன் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக அக்கட்சியின் பல்வேறு பதவிகளில் வகித்து வந்தார். இந்த நிலையில், கட்சியின் மாவட்ட பொறுப்பில் இருந்து விலகுவதாக மணிகண்டன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு தனது திருமணத்திற்கு கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமானை அழைத்து வர சிரமப்பட்டதாகவும், அதுவே தனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். கடைசியாக நடந்த நிகழ்வில் கூட, சீமான் சொன்ன வார்த்தைகள் தனக்கு மன வேதனை கொடுத்ததன் அடிப்படையில், கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக மணிகண்டன் கூறியுள்ளார். சமீபகாலமாக நாதகவில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருவது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில், நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார். அப்படியே விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார். இவர்கள் அனைவருமே சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதிலும், பூபாலன் விலகும்போது, நாம் தமிழரில் இருப்பவர்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்ட்டப்படிதான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் தன்னிடம் சொன்னதாகவும், அது அவருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதையும் படியுங்கள் : “கடைசி தமிழன் இருக்கும் வரை திராவிடத்தை தொட்டு கூட பார்க்க முடியாது” - உதயநிதி ஸ்டாலின் தற்போது விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரும் சீமான் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்து விலகி இருப்பது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, விழுப்புரம் மாவட்டத்தில் 2 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் விலகிய நிலையில், தற்போது மாவட்ட பொறுப்பாளர் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / NTK | அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்... பரபரப்பு குற்றச்சாட்டு... விழுப்புரம் நாதகவில் என்ன பிரச்சனை? NTK | அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்... பரபரப்பு குற்றச்சாட்டு... விழுப்புரம் நாதகவில் என்ன பிரச்சனை? விழுப்புரம் மாவட்டத்தில் 2 மாவட்டச் செயலாளர்களைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர், கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 21, 2024, 9:05 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி பொறுப்பாளர் மணிகண்டன் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக அக்கட்சியின் பல்வேறு பதவிகளில் வகித்து வந்தார். இந்த நிலையில், கட்சியின் மாவட்ட பொறுப்பில் இருந்து விலகுவதாக மணிகண்டன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு தனது திருமணத்திற்கு கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமானை அழைத்து வர சிரமப்பட்டதாகவும், அதுவே தனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். கடைசியாக நடந்த நிகழ்வில் கூட, சீமான் சொன்ன வார்த்தைகள் தனக்கு மன வேதனை கொடுத்ததன் அடிப்படையில், கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக மணிகண்டன் கூறியுள்ளார். விளம்பரம் சமீபகாலமாக நாதகவில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருவது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில், நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார். அப்படியே விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார். இவர்கள் அனைவருமே சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதிலும், பூபாலன் விலகும்போது, நாம் தமிழரில் இருப்பவர்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்ட்டப்படிதான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் தன்னிடம் சொன்னதாகவும், அது அவருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். விளம்பரம் இதையும் படியுங்கள் : “கடைசி தமிழன் இருக்கும் வரை திராவிடத்தை தொட்டு கூட பார்க்க முடியாது” - உதயநிதி ஸ்டாலின் தற்போது விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரும் சீமான் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்து விலகி இருப்பது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, விழுப்புரம் மாவட்டத்தில் 2 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் விலகிய நிலையில், தற்போது மாவட்ட பொறுப்பாளர் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , ntk , Seeman First Published : October 21, 2024, 9:05 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.