TAMIL-NADU

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ்! - எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக மக்களும், வியாபாரிகளும் மும்முரமாக தயாராகிவருகின்றனர். மறுபுறம் பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்கள் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட போனஸை அறிவித்துவருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு சமீபத்தில் ரயில்வே துறையினருக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக அறிவித்தது. அதேபோல், தற்போது தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் படி அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருணைத்தொகை மற்றும் போனஸ் ஆகிய இரண்டையும் இணைத்து 20 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் இவரா… விரைவில் ஆர்.என். ரவி மாற்றம்? - வெளியான தகவல் அந்தவகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் இந்த ஆண்டு போனஸாக 8.33 சதவீதமும், கருணை தொகையாக 11.67 சதவீதமும் என மொத்தம் 20 சதவீதம் போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், டாஸ்மாக் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு போனஸாக ரூ. 16,800 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ்! - எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ்! - எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு, பொதுத்துறை நிறுனங்களின் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு 20 சதவீதம் போனஸ் அறிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 21, 2024, 8:54 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக மக்களும், வியாபாரிகளும் மும்முரமாக தயாராகிவருகின்றனர். மறுபுறம் பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்கள் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட போனஸை அறிவித்துவருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு சமீபத்தில் ரயில்வே துறையினருக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக அறிவித்தது. அதேபோல், தற்போது தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் படி அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருணைத்தொகை மற்றும் போனஸ் ஆகிய இரண்டையும் இணைத்து 20 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. விளம்பரம் இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் இவரா… விரைவில் ஆர்.என். ரவி மாற்றம்? - வெளியான தகவல் அந்தவகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் இந்த ஆண்டு போனஸாக 8.33 சதவீதமும், கருணை தொகையாக 11.67 சதவீதமும் என மொத்தம் 20 சதவீதம் போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், டாஸ்மாக் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு போனஸாக ரூ. 16,800 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: diwali 2024 , Diwali bonus , Latest News , Tasmac First Published : October 21, 2024, 8:54 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.