TAMIL-NADU

"தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே தமிழ்த்தாய் வாழ்த்து” - சீமான் சொன்ன காரணம்!

கரூர் மாவட்டம், வெண்ணைமலையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய கோயிலுக்கு சொந்தமான இடங்களை மீட்க அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் அடிப்படையில், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கும் நடவடிக்கையில், அறநிலையத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கரூர் சென்றிருந்தார். ஆனால், சீமானுக்கு அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அவர் அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கினார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் விடுதியில் தங்கியிருந்த சீமானை நேரில் வந்து சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து சீமான் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது, புதுச்சேரி மாநில தமிழ்த் தாய் வாழ்த்தை தமிழ்நாட்டிற்கும் மாற்றுவேன். தமிழர் கழகம் என்று இருந்தால் பதவி ஏற்க மாட்டேன் என பெரியார் கூறியதால் திராவிட கழகம் என்று மாற்றினார்கள். இதனை யாரும் மறுப்பதற்கும் இல்லை, மறப்பதற்கும் இல்லை. ஆரியம்போல் என்ற சொல்லை ஏன் நீக்கினார்கள் என்றால், ஆரியர்கள் மனது புண்படும் என்று அதுக்கு ஒரு விளக்கம் சொல்கிறார்கள். இதையும் படியுங்கள் : “கடைசி தமிழன் இருக்கும் வரை திராவிடத்தை தொட்டு கூட பார்க்க முடியாது” - உதயநிதி ஸ்டாலின் திராவிடம் என்ற பெயர் வருவதாலே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அதை தமிழ்த்தாய் வாழ்த்தாக கொண்டு வந்தார் என்ற குற்றச்சாட்டை வைக்கிறேன். பாரதிதாசன் எழுதிய புதுச்சேரி வாழ்த்து எவ்வளவு அழகாக இருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தால், அதனை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன். தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஒரே பாட்டாக இருக்கட்டும். பாட்டு சிறப்பாக இருக்கிறது; இதைவிட வேற என்ன வேண்டும்” என்றார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / "தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே தமிழ்த்தாய் வாழ்த்து” - சீமான் சொன்ன காரணம்! "தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே தமிழ்த்தாய் வாழ்த்து” - சீமான் சொன்ன காரணம்! நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்படும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 21, 2024, 9:01 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் கரூர் மாவட்டம், வெண்ணைமலையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய கோயிலுக்கு சொந்தமான இடங்களை மீட்க அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் அடிப்படையில், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கும் நடவடிக்கையில், அறநிலையத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கரூர் சென்றிருந்தார். ஆனால், சீமானுக்கு அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அவர் அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கினார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் விடுதியில் தங்கியிருந்த சீமானை நேரில் வந்து சந்தித்தனர். விளம்பரம் இதனைத் தொடர்ந்து சீமான் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது, புதுச்சேரி மாநில தமிழ்த் தாய் வாழ்த்தை தமிழ்நாட்டிற்கும் மாற்றுவேன். தமிழர் கழகம் என்று இருந்தால் பதவி ஏற்க மாட்டேன் என பெரியார் கூறியதால் திராவிட கழகம் என்று மாற்றினார்கள். இதனை யாரும் மறுப்பதற்கும் இல்லை, மறப்பதற்கும் இல்லை. ஆரியம்போல் என்ற சொல்லை ஏன் நீக்கினார்கள் என்றால், ஆரியர்கள் மனது புண்படும் என்று அதுக்கு ஒரு விளக்கம் சொல்கிறார்கள். இதையும் படியுங்கள் : “கடைசி தமிழன் இருக்கும் வரை திராவிடத்தை தொட்டு கூட பார்க்க முடியாது” - உதயநிதி ஸ்டாலின் திராவிடம் என்ற பெயர் வருவதாலே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அதை தமிழ்த்தாய் வாழ்த்தாக கொண்டு வந்தார் என்ற குற்றச்சாட்டை வைக்கிறேன். பாரதிதாசன் எழுதிய புதுச்சேரி வாழ்த்து எவ்வளவு அழகாக இருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தால், அதனை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன். தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஒரே பாட்டாக இருக்கட்டும். பாட்டு சிறப்பாக இருக்கிறது; இதைவிட வேற என்ன வேண்டும்” என்றார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , ntk , Seeman First Published : October 21, 2024, 9:01 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.