BUSINESS

Diwali 2024: பரபரப்பாக நடக்கும் தீபாவளி ஷாப்பிங்... வார நாட்களிலும் அலைமோதும் கூட்டம்...

பரபரப்பாக நடக்கும் தீபாவளி ஷாப்பிங்... வார நாட்களிலும் அலைமோதும் கூட்டம்... இந்த மாதத்தின் இறுதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசும், புத்தாடைகளும் தான். பட்டாசுகளை மக்கள் தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன்னர் தான் வாங்குவார்கள் என்றாலும், புத்தாடைகளை முன்கூட்டியே வாங்கி வைத்து தீபாவளியை வரவேற்கக் காத்திருப்பது தான் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 2 வாரம் இருக்கும் நிலையில் மக்கள் கடைவீதிகளில் ஏறி இறங்கி தங்களுக்கு பிடித்தமான ஆடைகளைத் தேடித் திரிந்து வாங்கி வருகின்றனர். அந்தவகையில் திருச்சியில் ஷாப்பிங்கிற்கு ஃபேமஸான என்.எஸ்.பி ரோடு பகுதியில் உள்ள கடைகளில் மக்கள் புத்தாடைகளை வாங்குவதற்காக வருகை தருகின்றனர். வார இறுதி நாட்களில் இங்கு வழக்கமாக மக்கள் கூட்டம் காணப்படும் நிலையில், வேலை நாளான இன்றும் தீபாவளி பண்டிகைக்குப் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இதையும் படிங்க: தொடர் கனமழை எதிரொலி… காய்கறி வரத்துப் பாதிப்பு… தக்காளி விலை என்ன தெரியுமா… என்.எஸ்.பி ரோட்டின் இரு ஓரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் சின்ன சின்ன துணிக்கடைகள், காலணி, ஹேண்ட் பேக்குகள், பேன்சி ஸ்டோர் போன்ற கடைகளில் வியாபாரம் களைகட்டியது. பண்டிகை என்பதாலும் அதிக வெயில் இல்லாததாலும் பொறுமையாக மக்கள் தேவையான ஆடைகளையும், அணிகலன்களையும் வாங்குவதற்காக வந்திருந்தனர். மேலும், வண்ண வண்ண ஆடைகள், புதிய டிசைன்கள் அது மட்டும் அல்லாமல் தங்கள் எடுக்கும் ஆடைகளுக்கு ஏற்றவாறு கம்மல் ஜிமிக்கி, கழுத்திற்கு மாலை என அனைத்துப் பொருட்களையும் பெண்கள் பார்த்துப் பார்த்து ரசித்து வாங்கினர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / வணிகம் / Diwali 2024: பரபரப்பாக நடக்கும் தீபாவளி ஷாப்பிங்... வார நாட்களிலும் அலைமோதும் கூட்டம்... Diwali 2024: பரபரப்பாக நடக்கும் தீபாவளி ஷாப்பிங்... வார நாட்களிலும் அலைமோதும் கூட்டம்... பரபரப்பாக நடக்கும் தீபாவளி ஷாப்பிங்... வார நாட்களிலும் அலைமோதும் கூட்டம்... திருச்சி என்.எஸ்.பி ரோட்டில் வார நாட்களிலும் ஷாப்பிங் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tiruchirappalli,Tamil Nadu Last Updated : October 16, 2024, 1:05 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Santhana Priya தொடர்புடைய செய்திகள் இந்த மாதத்தின் இறுதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசும், புத்தாடைகளும் தான். பட்டாசுகளை மக்கள் தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன்னர் தான் வாங்குவார்கள் என்றாலும், புத்தாடைகளை முன்கூட்டியே வாங்கி வைத்து தீபாவளியை வரவேற்கக் காத்திருப்பது தான் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 2 வாரம் இருக்கும் நிலையில் மக்கள் கடைவீதிகளில் ஏறி இறங்கி தங்களுக்கு பிடித்தமான ஆடைகளைத் தேடித் திரிந்து வாங்கி வருகின்றனர். அந்தவகையில் திருச்சியில் ஷாப்பிங்கிற்கு ஃபேமஸான என்.எஸ்.பி ரோடு பகுதியில் உள்ள கடைகளில் மக்கள் புத்தாடைகளை வாங்குவதற்காக வருகை தருகின்றனர். விளம்பரம் வார இறுதி நாட்களில் இங்கு வழக்கமாக மக்கள் கூட்டம் காணப்படும் நிலையில், வேலை நாளான இன்றும் தீபாவளி பண்டிகைக்குப் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இதையும் படிங்க: தொடர் கனமழை எதிரொலி… காய்கறி வரத்துப் பாதிப்பு… தக்காளி விலை என்ன தெரியுமா… என்.எஸ்.பி ரோட்டின் இரு ஓரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் சின்ன சின்ன துணிக்கடைகள், காலணி, ஹேண்ட் பேக்குகள், பேன்சி ஸ்டோர் போன்ற கடைகளில் வியாபாரம் களைகட்டியது. பண்டிகை என்பதாலும் அதிக வெயில் இல்லாததாலும் பொறுமையாக மக்கள் தேவையான ஆடைகளையும், அணிகலன்களையும் வாங்குவதற்காக வந்திருந்தனர். விளம்பரம் மேலும், வண்ண வண்ண ஆடைகள், புதிய டிசைன்கள் அது மட்டும் அல்லாமல் தங்கள் எடுக்கும் ஆடைகளுக்கு ஏற்றவாறு கம்மல் ஜிமிக்கி, கழுத்திற்கு மாலை என அனைத்துப் பொருட்களையும் பெண்கள் பார்த்துப் பார்த்து ரசித்து வாங்கினர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: diwali 2024 , Local News , Shopping , Trichy First Published : October 16, 2024, 1:05 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.