BUSINESS

ஏற்றுமதியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்... மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கையாக, ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும்போது, விதிக்கப்பட்ட சுங்க மற்றும் கலால் வரியை திரும்ப பெறுவது, ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அளித்து வருகிறது. வெளிநாட்டு வர்த்தக கொள்கையின்படி, சுங்க மற்றும் கலால் வரியை திரும்ப பெறுவது, ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு பெறுவதற்க்கு ஆர்.சி.எம்.சி. எனப்படும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டியதாக இருந்தது. இந்த சான்றிதழை, ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் கமாடிட்டி போர்டுகளால் இந்த சான்றிதழை பெற வேண்டும். இந்நிலையில், மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்றுமதியாளர்கள் சுங்க மற்றும் கலால் வரியை திரும்பெறுவதற்கு ஆர்.சி.எம்.சி. சான்றிதழ் தேவையில்லை என்று கூறியுள்ளது. இது தொடர்பாக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையிலான மத்திய, மாநில வரி விதிப்பில் தள்ளுபடி, ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விலக்கு போன்ற திட்டங்களுக்கு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் பொருந்தாது. ஏற்றுமதியாளர்கள் இந்த சான்றிதழ் இன்றியும், பல்வேறு திட்டங்களின் நன்மையை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. தமிழ் செய்திகள் / வணிகம் / ஏற்றுமதியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்... மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு ஏற்றுமதியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்... மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு ஏற்றுமதியாளர்கள் சுங்க மற்றும் கலால் வரியை திரும்பெறுவதற்கு ஆர்.சி.எம்.சி. சான்றிதழ் தேவையில்லை என்று கூறியுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Delhi Last Updated : October 10, 2024, 6:03 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கையாக, ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும்போது, விதிக்கப்பட்ட சுங்க மற்றும் கலால் வரியை திரும்ப பெறுவது, ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அளித்து வருகிறது. வெளிநாட்டு வர்த்தக கொள்கையின்படி, சுங்க மற்றும் கலால் வரியை திரும்ப பெறுவது, ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு பெறுவதற்க்கு ஆர்.சி.எம்.சி. எனப்படும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டியதாக இருந்தது. இந்த சான்றிதழை, ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் கமாடிட்டி போர்டுகளால் இந்த சான்றிதழை பெற வேண்டும். விளம்பரம் இந்நிலையில், மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்றுமதியாளர்கள் சுங்க மற்றும் கலால் வரியை திரும்பெறுவதற்கு ஆர்.சி.எம்.சி. சான்றிதழ் தேவையில்லை என்று கூறியுள்ளது. இது தொடர்பாக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையிலான மத்திய, மாநில வரி விதிப்பில் தள்ளுபடி, ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விலக்கு போன்ற திட்டங்களுக்கு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் பொருந்தாது. ஏற்றுமதியாளர்கள் இந்த சான்றிதழ் இன்றியும், பல்வேறு திட்டங்களின் நன்மையை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: central government , Central govt , export , Latest News First Published : October 10, 2024, 6:03 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.