BUSINESS

டிசைன் டிசைனா மண்டை ஓடு... மிரள வைக்கும் தசரா வேடத்திற்கான பொருட்கள்...

தசரா பொருட்கள் விற்பனை இந்திய அளவில் மைசூருக்கு அடுத்தபடியாகத் தசரா திருவிழா, வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தான். இங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். தென்னிந்தியாவின் மிகப்பெரிய பண்டிகையான இந்த குலசேகரபட்டினம் தசரா திருவிழாவில் தென் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலிருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் பெரும்பாலானோர் விரதமிருந்து பல்வேறு வேடமணிந்து பங்கேற்பது தான் இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும். ஏராளமான பக்தர்கள் விரதத்தைத் தொடங்கியுள்ள நிலையில் மகிசாசூரசம்காரம் விழாவை முன்னிட்டு வேடமிடும் பொருட்களையும் வாங்கத் தொடங்கியுள்ளனர். இதையும் படிங்க: வேட்டையன் படம் ரிலீஸ் அதுமா இப்படியா… இந்த தீவிர ரசிகர் செய்த செயல் தான் ட்ரெண்டிங்… குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில் அக்டோபர் 13ஆம் தேதி மகிசாசூரசம்காரம் நடைபெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப 61 நாள், 41 நாள், 31 நாள் என விரதமிருந்து வருகின்றனர். மற்ற பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப விரதத்தைத் தொடங்கியுள்ளனர். மேலும், விரதம் இருந்து கோவில் செல்லும் பக்தர்கள் தாங்கள் அணிவதற்கு சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு வேடங்களுக்கான தசரா பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காகக் குமரி மாவட்டம் கோட்டார் பகுதியிலுள்ள கடைகளில் பக்தர்கள் வேடமணியும் பொருட்களை விற்பனைக்குக் குவித்து வைத்துள்ளனர். இந்த பொருட்களைப் பக்தர்கள் குவிந்து போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருவதால், கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு ஊர்களிலும் பக்தர்களின் வேட பொருட்கள் விற்பனை களைகட்டி வருகிறது. இதையும் படிங்க: 47 ஆண்டு கழித்து நடந்திருக்கு… வேட்டையன் பட ரிலீஸை கொண்டாடிய குமரி ரசிகர்கள்… இது குறித்து நாகர்கோவில் கோட்டார் பகுதியில் தசராவி வேடப் பொருட்கள் விற்பனை செய்து வரும் பிரியா கூறுகையில், “குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கடைசிக் கட்டத்தை எட்டி உள்ளது. இதனை முன்னிட்டு விரதம் இருந்து வேடமணியும் பக்தர்கள் தங்கள் வேடத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு பல வித்தியாசமான வேட முகங்கள் விற்பனைக்காக வந்துள்ளது. மேலும், பக்தர்கள் எளிதில் அணியும் வகையில் பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் குழந்தைகளுக்கான மாறுவேடப் பொருட்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. தற்பொழுது குழந்தைகளுக்கான தசரா வேடப் பொருட்களும் விற்பனைக்காக அதிக அளவில் வந்துள்ளது” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.