BUSINESS

ஆடி மாத கடைசி செவ்வாய் எதிரொலி... தோவாளை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு...

தோவாளை மலர் சந்தை பூக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை தென் தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தை கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன. தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று மல்லிகை ரூ.400க்கும், பிச்சி ரூ.250க்கும், சம்பங்கி ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு இன்று பூக்கள் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, பிச்சிப்பூ கிலோ ரூ.400க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.500க்கும், அரளிப்பூ கிலோ ரூ.150க்கும், வாடாமல்லி கிலோ ரூ.60க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.60க்கும், சம்பங்கி கிலோ ரூ.250க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.500க்கும், ரோஸ் கிலோ ரூ.150க்கும் விற்பனையாகிறது. மேலும், ஸ்டெம்ப்ரோஸ் ஒரு கட்டு ரூ.300க்கும், துளசி கிலோ ரூ.30க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.10க்கும், மரிக்கொழுந்து கிலோ ரூ.120க்கும், செவ்வந்தி கிலோ ரூ.220க்கும் விற்பனையாகிறது. இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், \“ஆடி கடைசி செவ்வாயை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. இதனால் கோவில் பூஜைக்காகப் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் இது திருவோணம் சீசன் ஆரம்பம் என்பதால் பூக்கள் விலை உயரத் தொடங்கியுள்ளது” எனத் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / வணிகம் / ஆடி மாத கடைசி செவ்வாய் எதிரொலி... தோவாளை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு... ஆடி மாத கடைசி செவ்வாய் எதிரொலி... தோவாளை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு... தோவாளை மலர் சந்தை பூக்கள் ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Kanniyakumari,Tamil Nadu Last Updated : August 12, 2024, 1:36 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : M Bagavathmal தொடர்புடைய செய்திகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை தென் தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தை கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன. தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று மல்லிகை ரூ.400க்கும், பிச்சி ரூ.250க்கும், சம்பங்கி ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு இன்று பூக்கள் விலை உயர்ந்துள்ளது. விளம்பரம் ஒரே நாளில் சர்ரென உயர்ந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன? - 13 August அதன்படி, பிச்சிப்பூ கிலோ ரூ.400க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.500க்கும், அரளிப்பூ கிலோ ரூ.150க்கும், வாடாமல்லி கிலோ ரூ.60க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.60க்கும், சம்பங்கி கிலோ ரூ.250க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.500க்கும், ரோஸ் கிலோ ரூ.150க்கும் விற்பனையாகிறது. மேலும், ஸ்டெம்ப்ரோஸ் ஒரு கட்டு ரூ.300க்கும், துளசி கிலோ ரூ.30க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.10க்கும், மரிக்கொழுந்து கிலோ ரூ.120க்கும், செவ்வந்தி கிலோ ரூ.220க்கும் விற்பனையாகிறது. விளம்பரம் இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், \“ஆடி கடைசி செவ்வாயை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. இதனால் கோவில் பூஜைக்காகப் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் இது திருவோணம் சீசன் ஆரம்பம் என்பதால் பூக்கள் விலை உயரத் தொடங்கியுள்ளது” எனத் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Aadi , Jasmine , kanniyakumari , Local News First Published : August 12, 2024, 1:36 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.