மாதிரிப்படம் ஐடிஆர் ரீஃபண்ட் தொடர்பாக வருமான வரித் துறையானது வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐடிஆர் ரீஃபண்ட் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் இந்தப் பதிவு உங்களுக்கானது. ஐடிஆர் ரீஃபண்ட் தொடர்பாக மோசடி செய்பவர்கள் தங்கள் செயல்பாட்டை தற்போது அதிகரித்து, வரி செலுத்துவோருக்கு போலி அழைப்பை மேற்கொள்கிறார்கள். அதோடு, மின்னஞ்சல் அனுப்புகிறார்கள் அல்லது பாப்-அப் செய்தியைக் அனுப்புகிறார்கள். ஆகவே, வரி செலுத்துவோர் இந்த மோசடி வலையில் விழாமல் இருக்க வேண்டும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடிகள் பெரும்பாலும் வரி செலுத்துவோருக்குத் தாங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றதாகத் தெரிவிக்கும் மின்னஞ்சல் வடிவில் இருக்கும், சில சமயங்களில் தொகை குறிப்பிடப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் தங்கள் வங்கிக் கணக்கை போலியான இணைப்புகள் மூலம் சரிபார்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள் அல்லது அவர்களின் தனிப்பட்ட விவரங்களை தரும்படி கேட்கப்படுகிறார்கள். அதன்பின்னர் அவர்கள் நிதி ரீதியாக ஏமாற்றப்படுகிறார்கள். மின்னஞ்சல்கள் அல்லது செல்போன் அழைப்புகள் மூலம் பொதுமக்களிடமிருந்து கிரெடிட் கார்டு எண்கள் அல்லது பின்கள் கேட்கப்படாது என்று வருமான வரித்துறை பொதுமக்களுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. வருமான வரித்துறை தனது சமீபத்திய ட்வீட்டில், வரி செலுத்துவோர் இதுபோன்ற செய்திகளுக்கு விழ வேண்டாம் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தியை மட்டும் பின்பற்றும் படி அறிவுறுத்தியது. Also Read | UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்! ஃபிஷிங் தளங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடிய செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் அல்லது இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று X தளத்தில் பொதுமக்களிடம் வருமான வரித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. வரி செலுத்துவோர் கவனம் செலுத்த வேண்டிய ஒரே உள்ளடக்கம், அதிகாரப்பூர்வமான ITR ஒப்புதலின் இணைப்புகளில் உள்ளது. இதுபோன்ற போலி மின்னஞ்சல்கள் அல்லது செய்திகள் இருந்தால், அவற்றை பொதுமக்கள் தங்களுக்கு அனுப்புமாறு வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. சந்தேகம் உள்ள எந்த மின்னஞ்சலும் webmanager@incometax.gov.in மற்றும் incident@cert-in.org.in க்கு அனுப்பப்பட வேண்டும். இதுபோன்ற மோசடிகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது உதவும் என்று கூறப்பட்டுள்ளது. None
Popular Tags:
Share This Post:
ரூ.1 கோடி பெறும் வாய்ப்பை நிராகரித்து, ரூ.500 கோடி மதிப்பிலான காஸ்மெட்டிக் பிராண்டை உருவாக்கிய பெண்!
August 26, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- August 17, 2024
-
- August 17, 2024
-
- August 17, 2024
Featured News
Latest From This Week
கடனில் தொடங்கிய நிறுவனம்... மூன்று ஆண்டுகளில் ரூ.120 கோடி ஈட்டி சாதித்த பெண்..!
BUSINESS
- by Sarkai Info
- August 13, 2024
ஆடி மாத கடைசி செவ்வாய் எதிரொலி... தோவாளை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு...
BUSINESS
- by Sarkai Info
- August 12, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.