பான் கார்டு நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரி செலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10 இலக்க எண்ணாகும். இந்த பான் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க சிரமப்படுகிறீர்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான். PayNearby உட்பட அருகிலுள்ள பல்வேறு சில்லறை விற்பனைக் கடைகளுக்குச் சென்று இரண்டு மணி நேரத்திற்குள் உங்கள் டிஜிட்டல் பான் கார்டைப் (ePAN) பெறலாம். வருமான வரித் துறை அளித்துள்ள சமீபத்திய டேட்டாவில், பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இடையிலும் பாலின வேறுபாடு காணப்படுவதாக தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 31, 2024 நிலவரப்படி, 31.05 கோடி பெண்களும் ஆண்கள் 42.10 கோடி ஆண்களும் பான் வைத்துள்ளனர். மேலும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இந்த ஏற்றத்தாழ்வு இன்னும் அதிகமாகக் காணப்படுகிறது, இந்த இடைவெளியைக் குறைக்கவும், செயல்முறையை எளிதாக்கவும், ‘PayNearby’ மற்றும் பல சில்லறை விற்பனைக் கடைகள் அங்கீகரிக்கப்பட்ட PAN சேவை மையமாக மாற்றப்பட்டுள்ளன. இந்த சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் உங்கள் பான் கார்டைப் பெறுவதற்கான வழிகளை பற்றி தெரிந்துகொள்ளலாம். இதையும் படிக்க: கடனுக்கான EMI கட்டத் தவறினால் என்னாகும் தெரியுமா? சட்டம் சொல்வது என்ன? தேவையான ஆவணங்கள்: கடைக்குச் செல்வதற்கு முன், உங்களிடம் பின்வரும் ஆவணங்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். - ஆதார் அட்டை மற்றும் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் - வாக்காளர் அடையாள அட்டை - பயன்பாட்டு பில்கள் (மின்சாரம், நீர், எரிவாயு) - ஓட்டுநர் உரிமம் - மெட்ரிகுலேஷன் சான்றிதழ் PAN விண்ணப்ப செயல்முறை: 1: நீங்கள் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா அல்லது ஏற்கனவே உள்ள ஒன்றைப் புதுப்பிக்க வேண்டுமா என்பதை கடை ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும். 2: OTP சரிபார்ப்புக்காக உங்கள் மொபைல் எண்ணை வழங்க வேண்டும். 3: உங்களிடம் ஏற்கனவே பான் கார்டு இருக்கிறதா என்று கடைகள் சரிபார்த்து, தேவைப்பட்டால் அதே விண்ணப்பத்துடன் தொடர வேண்டும். 4: பெயர், ஆதார் எண் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள் உட்பட தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். 5: eKYC (ஆதார் விவரங்களை மட்டும் பயன்படுத்தி) அல்லது ஸ்கேன் (ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள் ) இடையே தேர்வு செய்யவும். பிசிக்கல் பான் கார்டு (ரூ.107) அல்லது ePAN கார்டு (ரூ.72) ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 6: தேவையான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். 7: eKYC அங்கீகாரத்தை முடிக்க வேண்டும். 8: ஆவணத்தில் டிஜிட்டல் கையொப்பமிட்டு OTP-ஐ பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும். 9: உங்கள் விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்க்க வேண்டும். 10: ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அதாவது அக்னாலஜ்மென்ட் நம்பர் ஜெனரேட் ஆகவில்லை என்றால், பணத்தைத் திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுக்க வேண்டும். None
Popular Tags:
Share This Post:
ரூ.1 கோடி பெறும் வாய்ப்பை நிராகரித்து, ரூ.500 கோடி மதிப்பிலான காஸ்மெட்டிக் பிராண்டை உருவாக்கிய பெண்!
August 26, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- August 17, 2024
-
- August 17, 2024
-
- August 17, 2024
Featured News
Latest From This Week
கடனில் தொடங்கிய நிறுவனம்... மூன்று ஆண்டுகளில் ரூ.120 கோடி ஈட்டி சாதித்த பெண்..!
BUSINESS
- by Sarkai Info
- August 13, 2024
ஆடி மாத கடைசி செவ்வாய் எதிரொலி... தோவாளை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு...
BUSINESS
- by Sarkai Info
- August 12, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.