நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பறக்கின்றனர். அத்துடன், அவர்கள் டன் கணக்கிலான லக்கேஜ்களையும் எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், விமானப் பயணிகள் இனி 20 கிலோவுக்கு மேல் லக்கேஜ் எடுத்து செல்ல முடியாது என்று ஏர் இந்தியா தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், விமானப் பயணிகள் தற்போது எடுத்துச் செல்லும் இலவச லக்கேஜ் அனுமதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முன்பதிவுக்கான அறிவுறுத்தல்கள் மட்டுமே என்றும், சாதாரண பயணிகளுக்கான இலவச லக்கேஜ் அனுமதியில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளது. எனவே, இணையதளம், செல்போன் செயலி மற்றும் முன்பதிவு மையங்களில் விமானங்களுக்கு டிக்கெட் வாங்குவோர் இந்த மாற்றங்களால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஏர் இந்தியா விளக்கியுள்ளது. குறிப்பாக, கட்டணமில்லாமல் இலவசமாக லக்கேஜ் எடுத்துச் செல்ல இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் 20 கிலோ வரையும், வளைகுடா நாடுகளில் இருந்து செல்லும்போது 30 கிலோ வரையும், ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இருந்து 20 கிலோவும் அனுமதிக்கப்படுவதாக ஏர் இந்தியா கூறியுள்ளது. இதையும் படிங்க: சாப்பிடும்போது அழும் விலங்கு எது தெரியுமா? இந்த பழமொழி வந்த காரணம் இதுதான்! குறிப்பிட்ட அளவை விட அதிகமாக கொண்டு செல்லும் பேக்கேஜ்களுக்கு தற்போது 70 சதவீதம் வரை தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுவதாக கூறியுள்ள ஏர் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செல்வோருக்கு 5 கிலோவுக்கு முன்பு 150 திர்காமாக இருந்ததை, தற்போது 50 திர்காமாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல், 10 கிலோவுக்கு வசூலிக்கப்பட்ட 300 திர்காம் தற்போது 75 திர்காமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. தமிழ் செய்திகள் / வணிகம் / Air India : பயணிகள் லக்கேஜ் விதிகளில் மாற்றமா? - ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்! Air India : பயணிகள் லக்கேஜ் விதிகளில் மாற்றமா? - ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்! Air India : பயணிகள் லக்கேஜ் விதிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், பழையபடியே தொடர்வதாகவும் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 24, 2024, 6:56 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Periya Padmanaban தொடர்புடைய செய்திகள் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பறக்கின்றனர். அத்துடன், அவர்கள் டன் கணக்கிலான லக்கேஜ்களையும் எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், விமானப் பயணிகள் இனி 20 கிலோவுக்கு மேல் லக்கேஜ் எடுத்து செல்ல முடியாது என்று ஏர் இந்தியா தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், விமானப் பயணிகள் தற்போது எடுத்துச் செல்லும் இலவச லக்கேஜ் அனுமதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முன்பதிவுக்கான அறிவுறுத்தல்கள் மட்டுமே என்றும், சாதாரண பயணிகளுக்கான இலவச லக்கேஜ் அனுமதியில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளது. விளம்பரம் எனவே, இணையதளம், செல்போன் செயலி மற்றும் முன்பதிவு மையங்களில் விமானங்களுக்கு டிக்கெட் வாங்குவோர் இந்த மாற்றங்களால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஏர் இந்தியா விளக்கியுள்ளது. குறிப்பாக, கட்டணமில்லாமல் இலவசமாக லக்கேஜ் எடுத்துச் செல்ல இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் 20 கிலோ வரையும், வளைகுடா நாடுகளில் இருந்து செல்லும்போது 30 கிலோ வரையும், ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இருந்து 20 கிலோவும் அனுமதிக்கப்படுவதாக ஏர் இந்தியா கூறியுள்ளது. விளம்பரம் இதையும் படிங்க: சாப்பிடும்போது அழும் விலங்கு எது தெரியுமா? இந்த பழமொழி வந்த காரணம் இதுதான்! குறிப்பிட்ட அளவை விட அதிகமாக கொண்டு செல்லும் பேக்கேஜ்களுக்கு தற்போது 70 சதவீதம் வரை தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுவதாக கூறியுள்ள ஏர் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செல்வோருக்கு 5 கிலோவுக்கு முன்பு 150 திர்காமாக இருந்ததை, தற்போது 50 திர்காமாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல், 10 கிலோவுக்கு வசூலிக்கப்பட்ட 300 திர்காம் தற்போது 75 திர்காமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Air India , Flight , Flight travel First Published : August 24, 2024, 6:56 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
ரூ.1 கோடி பெறும் வாய்ப்பை நிராகரித்து, ரூ.500 கோடி மதிப்பிலான காஸ்மெட்டிக் பிராண்டை உருவாக்கிய பெண்!
August 26, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- August 17, 2024
-
- August 17, 2024
-
- August 17, 2024
Featured News
Latest From This Week
கடனில் தொடங்கிய நிறுவனம்... மூன்று ஆண்டுகளில் ரூ.120 கோடி ஈட்டி சாதித்த பெண்..!
BUSINESS
- by Sarkai Info
- August 13, 2024
ஆடி மாத கடைசி செவ்வாய் எதிரொலி... தோவாளை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு...
BUSINESS
- by Sarkai Info
- August 12, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.