NILGIRIS

Thread Garden: மணக்காத மலர் தோட்டம்... 6 கோடி மீட்டர் நூலில் உருவான அற்புதம்...

Thread Garden: மணக்காத மலர் தோட்டம்... 6 கோடி மீட்டர் நூலில் உருவான அற்புதம்... நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லம் பகுதிக்கு எதிரில் அமைந்துள்ள நூல் தோட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் செயற்கையான முறையில் கைகளால் உருவாக்கப்பட்ட பூக்களையும், செடிகளையும் அமைப்பினையும் வியக்க வைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுக்கால உழைப்பின் ஒரு பலனாகக் கைதேர்ந்து கைவினை கலைஞர்களால் இந்த நூல் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள மலர்கள் எந்தவித ஊசிகள் இன்றியும் இயந்திரங்கள் இன்றியும் செயற்கையாகக் கைதேர்ந்த 50 பெண்களைக் கொண்டு பேராசிரியர் ஆண்டனி ஜோசப் 1988ஆம் ஆண்டு என்பவர் இதனை உருவாக்கியுள்ளார். ஊட்டி நூல் தோட்டத்தில் செயற்கை பூக்கள் மற்றும் தாவரங்களின் மிக அற்புதமான மற்றும் நேர்த்தியான தொகுப்புகள் உள்ளன. இவை அனைத்தும் திறமையான கலைஞர்களின் கைகளால் நூலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. ஆண்டனி ஜோசப், தனது 50 திறமையான தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களுடன் இணைந்து இந்த தனித்துவமான தொடக்கத்தின் மூளையாக 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து உழைத்து, இன்று நாம் காணும் நூல்களின் அற்புதங்களை உருவாக்கினார். இதையும் படிங்க: ”நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்ன்னு நிரூபிச்சுட்டல்ல” அரிசியில் தத்ரூபமான ஓவியம் வடிக்கும் இளைஞர்… இந்த ஈர்ப்பை உருவாக்குவதில் சுமார் 6 கோடி மீட்டர் எம்பிராய்டரி நூல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், இந்த தோட்டம் கேரளாவில் உள்ள மலம்புழாவில் இருந்தது, ஆனால் பின்னர் 2002இல், ஊட்டி படகு இல்லத்திற்கு எதிரே உள்ள தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. இன்று இந்த தோட்டத்தில் 350 விதமான மலர் இனங்கள் உள்ளன. முழு உருவாக்கமும் நாமே கண்டுபிடித்த ‘நான்கு பரிமாண கையால் செய்யப்பட்ட எம்பிராய்டரி’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறையானது எந்திரங்கள் இல்லாமல், ஊசிகள் இல்லாமல் மற்றும் முற்றிலும் வெறும் கைகளின் உதவியுடன் செய்யப்படுகிறது. மலர்கள் மற்றும் இதழ்களுக்கான கடினமான அட்டைப் பலகைகள், தண்டுக்கான எஃகு மற்றும் செப்பு கம்பிகள் இந்த காட்சி மகிழ்ச்சியை உருவாக்கப் பல்வேறு வண்ணமயமான நூல்களுடன் உண்மையாகப் பயன்படுத்தப்பட்டன. இது உலகின் முதல் வகையாகப் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் தனித்துவமான உலக சாதனைகளில் குறிப்பிடப்பட்டுப் பாராட்டப்பட்டுள்ளது. இதையும் படிங்க: திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்… வெளிவந்த பல ஆண்டு மர்மம்… ஊட்டியில் உள்ள த்ரெட் கார்டனில், இந்த அழகுகளை உங்கள் கண்களில் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைப்பது மட்டுமல்லாமல், இந்த பிரமிக்க வைக்கும் கைவினைப்பொருட்களை வீட்டிற்கும் எடுத்துச் செல்லலாம் அந்த வகையில் இந்த செயற்கை பூக்கள் விற்பனையும் செய்யப்படுகிறது. இது குறித்து அங்கு பணியாற்றும் பிரதீப் கூறுகையில், “50 பெண்களைக் கொண்டு சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்ட் காலரில் உள்ள கேன்வாஸ் மெட்டீரியல் என கூறக்கூடிய அந்த பகுதிகளைப் பல்வேறு விதங்களில் வெட்டி எடுத்து அதன் மூலமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. பாறைகளுக்கு மேல் உள்ள பாசி தாமரைப்பூ மற்றும் பல்வேறு மலர்கள் அனைத்தும் கைகளாலேயே செய்யப்பட்டவை. யுனிக் ஓல்ட் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இதனை முழுதாகச் செய்வதற்கு 12 ஆண்டுகள் முழுவதுமாக ஆகியுள்ளது. பெரியோர்களுக்கு முப்பது ரூபாயும் குழந்தைகளுக்கு, இருபது ரூபாயும் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 350க்கு மேற்பட்ட இயற்கையான பூக்களைப் போலவே செயற்கை பூக்களை உருவாக்கி வைத்துள்ளோம். சிறந்த முறையில் பராமரித்தும் வருகிறோம்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.