NILGIRIS

Cyclone Fengal: 47 ஆண்டுக்குப் பின்னர் வந்த புயல் அச்சுறுத்தல்... தலை தப்பிய மலை மாவட்டம்...

Cyclone Fengal: 47 ஆண்டுக்குப் பின்னர் வந்த புயல் அச்சுறுத்தல்.. தலை தப்பிய மலை மாவட்டம்.. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் சுமார் 30 சென்டிமீட்டர் வரையிலும் மழைப் பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி மழையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பல்வேறு சமவெளிப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு கோவை மாவட்டத்தில் கனமழை பொழியும் என தனியார் வானிலை ஆய்வு மைய நிபுணர் அறிவித்ததன் பேரில் பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்திலும் மழையின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் மேகமூட்டம் சூழ்ந்து இருந்ததால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு பயணம் செய்தனர். மலை மாவட்டத்தில் மழையின் தாக்கம் சற்று குறைவாகவே இருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதையும் படிங்க: PAN 2.0: பழைய பான் கார்டு இனி செல்லாதா… புதிய கார்டில் என்னென்ன வசதி இருக்கு தெரியுமா..? மேக மூட்டம் சூழ்ந்துள்ளதால் மட்டுமே மக்கள் அவர்களது அன்றாடப் பணிகளைச் செய்வதிலும் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்வதிலும் சற்று இடையூறு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கோவை மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள நீலகிரியின் கடைக்கோடி கிராமமான கிண்ணக்கொரை கிராமப் பகுதிகளில் புயலின் தாக்கம் எதுவும் இன்றி இயல்பான நிலையிலே மக்கள் இருந்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / Cyclone Fengal: 47 ஆண்டுக்குப் பின்னர் வந்த புயல் அச்சுறுத்தல்... தலை தப்பிய மலை மாவட்டம்... Cyclone Fengal: 47 ஆண்டுக்குப் பின்னர் வந்த புயல் அச்சுறுத்தல்... தலை தப்பிய மலை மாவட்டம்... Cyclone Fengal: 47 ஆண்டுக்குப் பின்னர் வந்த புயல் அச்சுறுத்தல்.. தலை தப்பிய மலை மாவட்டம்.. 47 ஆண்டுக்குப் பின்னர் கோவையில் புயல் மழை பெய்யும் எனவும் இதன் தாக்கம் நீலகிரியிலும் நிலவும் என கூறப்பட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : December 1, 2024, 2:58 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் சுமார் 30 சென்டிமீட்டர் வரையிலும் மழைப் பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி மழையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பல்வேறு சமவெளிப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு கோவை மாவட்டத்தில் கனமழை பொழியும் என தனியார் வானிலை ஆய்வு மைய நிபுணர் அறிவித்ததன் பேரில் பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்திலும் மழையின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. விளம்பரம் நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் மேகமூட்டம் சூழ்ந்து இருந்ததால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு பயணம் செய்தனர். மலை மாவட்டத்தில் மழையின் தாக்கம் சற்று குறைவாகவே இருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதையும் படிங்க: PAN 2.0: பழைய பான் கார்டு இனி செல்லாதா… புதிய கார்டில் என்னென்ன வசதி இருக்கு தெரியுமா..? மேக மூட்டம் சூழ்ந்துள்ளதால் மட்டுமே மக்கள் அவர்களது அன்றாடப் பணிகளைச் செய்வதிலும் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்வதிலும் சற்று இடையூறு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கோவை மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள நீலகிரியின் கடைக்கோடி கிராமமான கிண்ணக்கொரை கிராமப் பகுதிகளில் புயலின் தாக்கம் எதுவும் இன்றி இயல்பான நிலையிலே மக்கள் இருந்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Cyclone Fengal , Local News , Nilgiris , Ooty First Published : December 1, 2024, 2:58 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.