NILGIRIS

Ooty Lake: பியூட்டி ஆகும் ஊட்டி ஏரி... ஆய்வு செய்த அமைச்சர்...

Ooty Lake: பியூட்டி ஆகும் ஊட்டி ஏரி... ஆய்வு செய்த அமைச்சர்... நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக ஊட்டி ஏரி அமைந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா கழகம் மூலம் ஊட்டி ஏரி செயல்பட்டு வருகிறது. இந்த ஏரி 1823ஆம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டது. ஊட்டியில் கட்டிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், வீடுகள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கோடப்பமந்து கால்வாய் மூலமாக இந்த ஏரியில் கலக்கிறது. மேலும், விவசாய நிலங்களிலிருந்து அடித்து வரப்படும் மண்ணும் இந்த ஏரியில் அடியில் படிகிறது. ஒரு ஆண்டிற்கு நான்கு லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஊட்டி சுற்றுலா வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி இந்த ஏரியைத் தூர்வாரச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையும் படிங்க: Red sandalwood: லட்சங்களில் லாபம் தரும் செம்மரம் சாகுபடி… விவசாயிகள் பயன்பெறுவது எப்படி தெரியுமா… இந்நிலையில், ஊட்டி ஏரியில் 7 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் துவங்கியுள்ளது. இந்த ஏரியின் அடியில் உள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணியில் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த பணிகளைப் பார்வையிட்ட தமிழ்நாடு தமிழ் வளர்ச்சியும் மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தமிழ்நாடு அரசு 7 கோடி 50 லட்சம் நிதி ஊட்டி ஏரியைத் தூர்வாரும் பணிகளுக்காக ஒதுக்கி உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு இந்த ஏரியைத் தூர்வார இந்த நிதி போதுமானதாக இருக்காது, இது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், இந்த ஏரியில் பணிகள் 8 மீட்டர் ஆழத்திற்குத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் இந்த விரைவில் முடிக்கப்பட்டு விடும் எனவும் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / Ooty Lake: பியூட்டி ஆகும் ஊட்டி ஏரி... ஆய்வு செய்த அமைச்சர்... Ooty Lake: பியூட்டி ஆகும் ஊட்டி ஏரி... ஆய்வு செய்த அமைச்சர்... Ooty Lake: பியூட்டி ஆகும் ஊட்டி ஏரி... ஆய்வு செய்த அமைச்சர்... ஊட்டி ஏரியில் உள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணி நவீன முறையில் நடைபெற்று வருகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : December 18, 2024, 5:58 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக ஊட்டி ஏரி அமைந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா கழகம் மூலம் ஊட்டி ஏரி செயல்பட்டு வருகிறது. இந்த ஏரி 1823ஆம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டது. ஊட்டியில் கட்டிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், வீடுகள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கோடப்பமந்து கால்வாய் மூலமாக இந்த ஏரியில் கலக்கிறது. மேலும், விவசாய நிலங்களிலிருந்து அடித்து வரப்படும் மண்ணும் இந்த ஏரியில் அடியில் படிகிறது. ஒரு ஆண்டிற்கு நான்கு லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஊட்டி சுற்றுலா வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி இந்த ஏரியைத் தூர்வாரச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். விளம்பரம் இதையும் படிங்க: Red sandalwood: லட்சங்களில் லாபம் தரும் செம்மரம் சாகுபடி… விவசாயிகள் பயன்பெறுவது எப்படி தெரியுமா… இந்நிலையில், ஊட்டி ஏரியில் 7 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் துவங்கியுள்ளது. இந்த ஏரியின் அடியில் உள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணியில் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த பணிகளைப் பார்வையிட்ட தமிழ்நாடு தமிழ் வளர்ச்சியும் மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். விளம்பரம் தமிழ்நாடு அரசு 7 கோடி 50 லட்சம் நிதி ஊட்டி ஏரியைத் தூர்வாரும் பணிகளுக்காக ஒதுக்கி உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு இந்த ஏரியைத் தூர்வார இந்த நிதி போதுமானதாக இருக்காது, இது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், இந்த ஏரியில் பணிகள் 8 மீட்டர் ஆழத்திற்குத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் இந்த விரைவில் முடிக்கப்பட்டு விடும் எனவும் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris First Published : December 18, 2024, 5:58 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.