நீலகிரியின் மொத்த பழங்குடியினரையும் இங்க பார்க்கலாம்... அறிய ஆர்வம் காட்டும் டூரிஸ்ட்கள்.. நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்து எம்.பாலாடா பகுதியில் அமைந்துள்ளது பழங்குடியினர் அருங்காட்சியகம். இந்த பழங்குடியினர் அருங்காட்சியகக் கட்டிடம் ஆனது 1989ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1995 முதல் பழங்குடியினர் ஆய்வு மையம் மற்றும் பழங்குடியினர் அருங்காட்சியகமாக, தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த பழங்குடியினர் அருங்காட்சியகம் சுற்றுலாப் பயணிகளுக்கும், மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் முக்கியமான சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. பழங்குடியினர் பாரம்பரியக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது பழங்குடியினர் அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கமாகும். இதையும் படிங்க: காஷ்மீர் ஆப்பிள் இனி ஊட்டியிலும்… ஆப்பிள் சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்… தமிழ்நாட்டில் வாழும் 36 வகைப் பழங்குடியினரின் பாரம்பரியம், கலாச்சாரம் சார்ந்த கலைப் பொருட்களான ஆபரணங்கள், வேட்டை கருவிகள், அன்றாட உபயோகிக்கும் பொருட்கள், மூங்கில் கூடைகள், பழங்குடியினர் மாதிரி வீடுகள், விவசாயக் கருவிகள், மீன்பிடி சாதனங்கள் அரிய புகைப்படங்கள், சிற்பங்கள், மாதிரி கோவில்கள் மற்றும் மூலிகை மற்றும் சிறு வனப் பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் இதர மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினரின் புகைப்படங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வாழும் பழங்குடியினரின் புகைப்படங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நுழைவு கட்டணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும், அரசு கல்லூரி மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்திலும் இந்த அருங்காட்சியகத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் அமைதியான சூழ்நிலையில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய காணொலி மற்றும் இசையுடன் அந்த பொருட்களைப் பார்வையிடுவது மிகவும் சுவாரசியமான ஒன்றாகவே உள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / நீலகிரியின் மொத்த பழங்குடியினரையும் இங்க பார்க்கலாம்... அறிய ஆர்வம் காட்டும் டூரிஸ்ட்கள்... நீலகிரியின் மொத்த பழங்குடியினரையும் இங்க பார்க்கலாம்... அறிய ஆர்வம் காட்டும் டூரிஸ்ட்கள்... நீலகிரியின் மொத்த பழங்குடியினரையும் இங்க பார்க்கலாம்... அறிய ஆர்வம் காட்டும் டூரிஸ்ட்கள்.. பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் பல்வேறு பழங்குடி மக்களின் பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட பல தகவல்களை பார்த்து அறிந்துகொள்ள முடியும். படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : December 16, 2024, 1:41 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்து எம்.பாலாடா பகுதியில் அமைந்துள்ளது பழங்குடியினர் அருங்காட்சியகம். இந்த பழங்குடியினர் அருங்காட்சியகக் கட்டிடம் ஆனது 1989ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1995 முதல் பழங்குடியினர் ஆய்வு மையம் மற்றும் பழங்குடியினர் அருங்காட்சியகமாக, தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த பழங்குடியினர் அருங்காட்சியகம் சுற்றுலாப் பயணிகளுக்கும், மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் முக்கியமான சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. பழங்குடியினர் பாரம்பரியக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது பழங்குடியினர் அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கமாகும். விளம்பரம் இதையும் படிங்க: காஷ்மீர் ஆப்பிள் இனி ஊட்டியிலும்… ஆப்பிள் சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்… தமிழ்நாட்டில் வாழும் 36 வகைப் பழங்குடியினரின் பாரம்பரியம், கலாச்சாரம் சார்ந்த கலைப் பொருட்களான ஆபரணங்கள், வேட்டை கருவிகள், அன்றாட உபயோகிக்கும் பொருட்கள், மூங்கில் கூடைகள், பழங்குடியினர் மாதிரி வீடுகள், விவசாயக் கருவிகள், மீன்பிடி சாதனங்கள் அரிய புகைப்படங்கள், சிற்பங்கள், மாதிரி கோவில்கள் மற்றும் மூலிகை மற்றும் சிறு வனப் பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் இதர மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினரின் புகைப்படங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வாழும் பழங்குடியினரின் புகைப்படங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நுழைவு கட்டணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும், அரசு கல்லூரி மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்திலும் இந்த அருங்காட்சியகத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். விளம்பரம் இந்த பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் அமைதியான சூழ்நிலையில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய காணொலி மற்றும் இசையுடன் அந்த பொருட்களைப் பார்வையிடுவது மிகவும் சுவாரசியமான ஒன்றாகவே உள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty First Published : December 16, 2024, 1:41 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 16, 2024
-
- December 16, 2024
-
- December 15, 2024
Featured News
Latest From This Week
Thread Garden: மணக்காத மலர் தோட்டம்... 6 கோடி மீட்டர் நூலில் உருவான அற்புதம்...
NILGIRIS
- by Sarkai Info
- December 3, 2024
”நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்ன்னு நிரூபிச்சுட்டல்ல” அரிசியில் தத்ரூபமான ஓவியம் வடிக்கும் இளைஞர்...
NILGIRIS
- by Sarkai Info
- December 3, 2024
Heavy Rain: கொட்டித் தீர்த்த கனமழை... மெல்ல மெல்லக் குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி...
NILGIRIS
- by Sarkai Info
- December 2, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.