NILGIRIS

Ooty Climate: வெயிலுக்காகக் காத்திருக்கும் மக்கள்... ஊட்டியில் நடுநடுங்க வைக்கும் குளிர்...

கடந்த ஆண்டுகளில் அதிக அளவில் பனிப்பொழிவு இருந்த நிலையில், இந்த ஆண்டு புயலின் தாக்கத்தால் பனிப்பொழிவு என்பது சற்று தாமதமாகியுள்ளது. பொதுவாகக் கார்த்திகை மாதம் துவங்கிய உடனே, நீர் பனிப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பனியின் தாக்கம் குறைந்து மழையின் தாக்கமே அதிகமாக இருந்தது. தற்பொழுது புயல் கரையைக் கடந்ததால் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பொழிந்து இருந்தாலும் மலை மாவட்டமான நீலகிரியில் நீர் பனிப்பொழிவு மற்றும் ஒரு சில பகுதிகளில் பனிப்பொழிவும் துவங்கியுள்ளது. இதையும் படிங்க: திராட்சைப் பழத்தில் இயேசு ஓவியம்... வித்தியாசமாக கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த ஓவியர்... அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சமவெளிப் பகுதிகளில் நிழலைத் தேடுவதைப் போல மலை மாவட்டமான நீலகிரியில் அதிகாலை நேரங்களில் மக்கள் வெயிலைத் தேடிக் காத்துக் கிடைக்கின்றனர். மேலும் அதிகமான குளிர் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகளும் அதிகாலை நேரங்களிலிருந்து ஊட்டியின் அழகை ரசிப்பதை மறந்து விடுகின்றனர். பல்வேறு இடங்களிலும் பணிகளுக்குச் செல்வோர் ஆங்காங்கே சிறிய அளவில் தீ மூட்டிக் குளிர் காய்ந்து தங்களைச் சூடாக வைத்துக் கொள்கின்றனர். தற்பொழுது நீர் பனிப் பொழிவு பொழிந்து வருவதால் விரைவில் உறை பனியும் நிலவுமென எதிர்பார்க்கின்றனர் உள்ளூர் விவசாயிகள். அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப சரியாகப் பனிப்பொழிவு மற்றும் மழை பொழிந்தால் மட்டுமே விவசாயமும் செழிப்பாக இருக்கும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும் எனவும் கருத்தைத் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Ooty Climate: வெயிலுக்காகக் காத்திருக்கும் மக்கள்... ஊட்டியில் நடுநடுங்க வைக்கும் குளிர்... Reported by: Raghul Chandran Last Updated: December 22, 2024 11:52 AM IST Ooty Climate: ஊட்டிக்குச் சுற்றுலா வந்த பயணிகள் கூட காலையில் நிலவும் பனிப்பொழிவால் வெளியில் செல்லாமல் வெயில் வரும் வரை காத்திருக்கின்றனர். Follow us on Google News Link copied! Share this Article WhatsApp facebook Twitter telegram copy link X வெயிலுக்காகக் காத்திருக்கும் மக்கள்... ஊட்டியில் நடுநடுங்க வைக்கும் குளிர்... நீலகிரி மாவட்டத்தில் பொதுவாகவே காலை நேரங்களில் அதிகமான குளிர் நிலவும். தற்சமயம் மார்கழி மாதம் என்பதால் பனிப்பொழிவு என்பது அதிகமாகவே இருக்கும். கடந்த ஆண்டுகளில் அதிக அளவில் பனிப்பொழிவு இருந்த நிலையில், இந்த ஆண்டு புயலின் தாக்கத்தால் பனிப்பொழிவு என்பது சற்று தாமதமாகியுள்ளது. பொதுவாகக் கார்த்திகை மாதம் துவங்கிய உடனே, நீர் பனிப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பனியின் தாக்கம் குறைந்து மழையின் தாக்கமே அதிகமாக இருந்தது. தற்பொழுது புயல் கரையைக் கடந்ததால் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பொழிந்து இருந்தாலும் மலை மாவட்டமான நீலகிரியில் நீர் பனிப்பொழிவு மற்றும் ஒரு சில பகுதிகளில் பனிப்பொழிவும் துவங்கியுள்ளது. இதையும் படிங்க: திராட்சைப் பழத்தில் இயேசு ஓவியம்... வித்தியாசமாக கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த ஓவியர்... அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சமவெளிப் பகுதிகளில் நிழலைத் தேடுவதைப் போல மலை மாவட்டமான நீலகிரியில் அதிகாலை நேரங்களில் மக்கள் வெயிலைத் தேடிக் காத்துக் கிடைக்கின்றனர். மேலும் அதிகமான குளிர் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகளும் அதிகாலை நேரங்களிலிருந்து ஊட்டியின் அழகை ரசிப்பதை மறந்து விடுகின்றனர். பல்வேறு இடங்களிலும் பணிகளுக்குச் செல்வோர் ஆங்காங்கே சிறிய அளவில் தீ மூட்டிக் குளிர் காய்ந்து தங்களைச் சூடாக வைத்துக் கொள்கின்றனர். தற்பொழுது நீர் பனிப் பொழிவு பொழிந்து வருவதால் விரைவில் உறை பனியும் நிலவுமென எதிர்பார்க்கின்றனர் உள்ளூர் விவசாயிகள். அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப சரியாகப் பனிப்பொழிவு மற்றும் மழை பொழிந்தால் மட்டுமே விவசாயமும் செழிப்பாக இருக்கும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும் எனவும் கருத்தைத் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க tags : Local News Nilgiris Ooty Snowfall Weather News in Tamil Location : The Nilgiris,Tamil Nadu First Published : December 22, 2024 11:52 AM IST தமிழ் செய்திகள் / நீலகிரி / Ooty Climate: வெயிலுக்காகக் காத்திருக்கும் மக்கள்... ஊட்டியில் நடுநடுங்க வைக்கும் குளிர்... View More Next Article None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.