NILGIRIS

ஜாதி, மதம் கடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... ஆதரவற்றோருடன் கொண்டாடிய நீலகிரி எஸ்பி...

ஜாதி, மதம் கடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... ஆதரவற்றோருடன் கொண்டாடிய நீலகிரி எஸ்பி... நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்துள்ள முள்ளிகொரை பகுதியில் அமைந்துள்ளது அன்பு அறிவு அறக்கட்டளை. இங்கு ஆதரவற்ற முதியவர்கள் பலர் இருந்து வருகின்றனர். இந்த இல்லத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா மற்றும் நகர மன்றத் தலைவர் வாணிஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், இந்த நிகழ்வில் மத நல்லிணக்க ஒருமைப்பாட்டுக் குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் குத்து விளக்கு ஏற்றி தொடங்கப்பட்ட நிகழ்வில் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் கிறிஸ்துமஸ் தாத்தாவின் சிறப்பு நடனம் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டது. இதையும் படிங்க: “உண்மையான மனிதனாக உள்ளே வாங்க“ சாதி, மத அடையாளத்திற்குத் தடா போடும் கிராம மக்கள்… மேலும், கிறிஸ்மஸ் திருவிழாவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நகர மன்றத் தலைவர் ஆகியோர் ஒன்றிணைந்து கிறிஸ்மஸ் கேக் வெட்டி குழந்தைகளுக்கு ஊட்டி, அனைவருக்கும் பகிர்ந்து அளித்த மகிழ்ந்தனர். பின்னர் நிகழ்வில் பேசிய காவல் கண்காணிப்பாளர், “நான் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவள். அங்கு எந்த ஒரு ஜாதி, மத வேறுபாடும் இன்றி ஒற்றுமையாகக் கிறிஸ்மஸ் பண்டிகைகளைக் கொண்டாடுவார்கள். இங்கேயும் அதே போல ஒற்றுமையைக் காண்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / ஜாதி, மதம் கடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... ஆதரவற்றோருடன் கொண்டாடிய நீலகிரி எஸ்பி... ஜாதி, மதம் கடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... ஆதரவற்றோருடன் கொண்டாடிய நீலகிரி எஸ்பி... ஜாதி, மதம் கடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... ஆதரவற்றோருடன் கொண்டாடிய நீலகிரி எஸ்பி... Christmas Celebration: முள்ளிகொரை பகுதியில் உள்ள அறக்கட்டளையில் ஆதரவற்றோருடன் சேர்ந்து எஸ்.பி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினார். படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : December 16, 2024, 10:41 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்துள்ள முள்ளிகொரை பகுதியில் அமைந்துள்ளது அன்பு அறிவு அறக்கட்டளை. இங்கு ஆதரவற்ற முதியவர்கள் பலர் இருந்து வருகின்றனர். இந்த இல்லத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா மற்றும் நகர மன்றத் தலைவர் வாணிஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், இந்த நிகழ்வில் மத நல்லிணக்க ஒருமைப்பாட்டுக் குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் குத்து விளக்கு ஏற்றி தொடங்கப்பட்ட நிகழ்வில் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் கிறிஸ்துமஸ் தாத்தாவின் சிறப்பு நடனம் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டது. விளம்பரம் இதையும் படிங்க: “உண்மையான மனிதனாக உள்ளே வாங்க“ சாதி, மத அடையாளத்திற்குத் தடா போடும் கிராம மக்கள்… மேலும், கிறிஸ்மஸ் திருவிழாவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நகர மன்றத் தலைவர் ஆகியோர் ஒன்றிணைந்து கிறிஸ்மஸ் கேக் வெட்டி குழந்தைகளுக்கு ஊட்டி, அனைவருக்கும் பகிர்ந்து அளித்த மகிழ்ந்தனர். பின்னர் நிகழ்வில் பேசிய காவல் கண்காணிப்பாளர், “நான் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவள். அங்கு எந்த ஒரு ஜாதி, மத வேறுபாடும் இன்றி ஒற்றுமையாகக் கிறிஸ்மஸ் பண்டிகைகளைக் கொண்டாடுவார்கள். இங்கேயும் அதே போல ஒற்றுமையைக் காண்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Christmas , Local News , Nilgiris , Ooty First Published : December 16, 2024, 10:41 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.