மாணவர்களுக்கு ஆவின் மில்க் ஷேக் வழங்கும் பள்ளி... இந்த Eat Right School பற்றி தெரியுமா..? நம் அன்றாட வாழ்வில் வாழ்வாதாரத்திற்குச் சத்தான உணவுகளை உண்பது அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. அதிலும் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து என்பது மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. குழந்தைகள் காலை நேரங்களில் சரியாக உணவு உட்கொள்ளாமையும், உணவுப் பழக்க வழக்கத்தில் சமீப காலங்களில் பல்வேறு மாற்றத்தினைக் கண்டு வருவதாலும், போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் உணவுப் பாதுகாப்புத் துறையின் மூலமாக, “Eat Right School” சத்தான உணவுகளையும், அவற்றை சுகாதாரமாகச் சூழ்நிலையில் உட்கொள்வதைக் குறித்தும், பல்வேறு பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்களும் நடத்தப்பட்டுள்ளது. இதையும் படிங்க: கறுக் மொறுக் சேவு… எச்சில் ஊற வைக்கும் கருப்பட்டி மிட்டாய்… இது கீழ ஈரால் ஸ்பெஷல்… அதில் நீலகிரி மாவட்டத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஓடைக்காடு, ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆடாசோலை, தக்கர் பாபா நகர் நடுநிலைப்பள்ளி, பிளன்மார்கன் நடுநிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகள் இந்த “ஈட் ரைட் ஸ்கூல்” சான்றிதழைப் பெற்றுள்ளது. காலை நேரத்தில் சத்தான உணவும், 11 மணியளவில் ஆவின் பாலகத்தின் மூலமாக பால் மற்றும் மதிய வேளையில் சிறந்த சத்துணவு முட்டை ஆகியவை மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சுத்தமான சமையலறை, பள்ளி வளாகம், பள்ளியைச் சுற்றிய பூங்காக்கள், சுத்தமான கழிவறைகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு சிறு வயது முதலே எவ்வாறு சுத்தமாக இருப்பது, சத்தான உணவுகளை உட்கொள்ளும் வழிமுறைகள், துரித உணவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர். இதையும் படிங்க: ”நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்ன்னு நிரூபிச்சுட்டல்ல” அரிசியில் தத்ரூபமான ஓவியம் வடிக்கும் இளைஞர்… “ஈட் ரைட் ஸ்கூல்” சான்றிதழ் பெற்ற பாடசாலை பள்ளி ஆசிரியை ஈஸ்வரி கூறுகையில், “எங்கள் பள்ளிக்கு உணவு பாதுகாப்புத் துறை மூலமாக இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எங்கள் பள்ளிக்கு ஆய்வு செய்து சென்றுள்ளனர். இந்த ஆண்டு இந்த சான்றிதழை வழங்கியுள்ளனர். இது அடுத்த மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும். பல்வேறு செயல்முறை விளக்கங்களையும் அளித்தனர். மேலும் பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்திச் சென்றனர். அதனை எங்கள் மாணவர்கள் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். மேலும் கராத்தே, யோகா, டான்ஸ் போன்றவைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கை கழுவும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து ஆராயும் அளவிற்கு குழந்தைகள் தெளிவாக உள்ளனர். பாதுகாப்பான சூழல், சிறந்த உணவு, கல்வி என அனைத்துமே கிடைக்கும் பட்சத்தில் வரும் காலங்களில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையும் அதிகரிக்கும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 16, 2024
-
- December 16, 2024
-
- December 15, 2024
Featured News
Latest From This Week
Thread Garden: மணக்காத மலர் தோட்டம்... 6 கோடி மீட்டர் நூலில் உருவான அற்புதம்...
NILGIRIS
- by Sarkai Info
- December 3, 2024
”நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்ன்னு நிரூபிச்சுட்டல்ல” அரிசியில் தத்ரூபமான ஓவியம் வடிக்கும் இளைஞர்...
NILGIRIS
- by Sarkai Info
- December 3, 2024
Heavy Rain: கொட்டித் தீர்த்த கனமழை... மெல்ல மெல்லக் குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி...
NILGIRIS
- by Sarkai Info
- December 2, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.